Skip to main content

“அரசு ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையம் திறக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

“Government I.A.S. Exam coaching center will be opened” - Minister Chakrapani

 

திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ‘கல்லூரி கனவு’ எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஜி.டி.என் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

 

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 12ம் வகுப்பு முடித்து அடுத்ததாக உயர்கல்வி என்ன படிக்க வேண்டும் தொடர்பான ஆலோசனை பெற மாவட்டம் முழுவதும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார்.


இந்த விழாவில் பேசிய அமைச்சர்  சக்கரபாணி, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 38 மாவட்டங்களில் இல்லாத பெருமை நமது திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஆறு கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மாணவர்கள்  உயர் கல்வி பயில வேண்டுமென்றால் வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நமது மாவட்டத்திலே அதற்கான கல்லூரிகள் உள்ளன. அடுத்த வருடம் நத்தத்தில் புதிதாக கல்லூரி துவங்கப்படும்.


டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு ஆயக்குடியில் தனியார் நடத்தும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் சென்னை சென்று படிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. ஏழை எளிய மாணவர்களும் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் வகையில், இந்த ஆண்டு நமது மாவட்டத்திலேயே விரைவில் இதற்கான பயிற்சி மையம் ஆரம்பிக்க இருக்கிறோம். 

 

அகாடமிகள் சென்னையில் எப்படி இருக்கிறதோ அதேபோல் மிகவும் திறன் பெற்ற கல்லூரி பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், விஞ்ஞானிகளை இங்கு வரவழைத்து தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் வகையில் பெரிய  அளவில் பயிற்சி மையம் திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்க இருக்கிறோம். தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளி மாணவ மாணவிகளுக்கு குறியீடு மட்டும் ரோபோ முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களை கொண்டு கோடைகாலத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்” என்று கூறினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.