Skip to main content

“அரசு எங்கள் மனச் சுமைகளை போக்கியுள்ளது..” - செவிலியர் சங்க பொதுச் செயலாளர் உஷாராணி

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

"The government has relieved us of our mental burdens ..." - Usharani, General Secretary of the Nurses' Association

 

தமிழ்நாடு முழுக்க எட்டாயிரம் கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) உள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் SHN, CHN என இவர்கள் மூவாயிரம் பேர் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தாய், சேய் நலப் பிரிவில் செவிலியர்களாக உள்ளனர். நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதியை நேரிடையாக கொண்டு செல்கின்றனர். 

 

அதேபோல், கரோனா தடுப்பூசி பணியிலும் இவர்களது பங்கு அதிகளவில் இருந்துவருகிறது. ஏற்கனவே உள்ள தாய் சேய் நலப் பணியோடு, மெகா கேம்ப், பூத் வாரியாக முகாம், கிராமம் கிராமமாக, வீடு வீடாக என வாரத்தில் 7 நாட்களும் தொடர்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மன உளைச்சல் உட்பட பல்வேறு நெருக்கடிக்குள்ளான செவிலியர்கள், அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தனர். 

 

இந்நிலையில், ஐந்து அமைப்புகளை உள்ளடக்கிய VHN, SHN, CHN கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 19ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள். அடுத்து 23ஆம் தேதி சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதிலும் இருந்துவந்த செவிலியர்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்கள். 

 

இத்தகவல் முதல்வர் அலுவலக கவனத்திற்குச் செல்ல, ‘உடனே அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணுங்கள்’ என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு சி.எம். அலுவலகத்திலிருந்து தகவல் வந்துள்ளது. 22ஆம் தேதி கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். அதற்கு செவிலியர் சங்க நிர்வாகிகள், ‘அமைச்சரிடம்தான் பேச வேண்டும்’ என கூறியிருக்கிறார்கள். அமைச்சரிடம் பேசிய செயலர் ராதாகிருஷ்ணன், 24ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

 

"The government has relieved us of our mental burdens ..." - Usharani, General Secretary of the Nurses' Association

 

இது பற்றி நம்மிடம் பேசிய கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் உஷாராணி, “24ஆம் தேதி காலை உயர்மட்ட அலுவலர்கள் உள்பட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டு அமைச்சர், எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கிராமத்தில் ஒரே இடத்தில் தடுப்பூசி பணியை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள இந்த வாரம் தவிர்த்து, இனிவரும் வாரங்களில் வாரத்தில் ஒரே ஒரு முகாம் என்றும், அதுவும் விடுமுறை நாள் இல்லாமல் பணி நாட்களில் நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

 

அதேபோல் முகாம் நடைபெறும் நேரத்தை காலை 7 முதல் இரவு 7 என்பதை மாற்றி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தலாம் என்றும் ஒப்புதல் அளித்துள்ளார். கரோனா தடுப்பூசி சம்பந்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 

 

முதல்வர் அறிவித்தபடி ஊக்க ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். அதேபோல் எங்களது மற்றொரு கோரிக்கையான சமுதாய சுகாதார செவிலியர் பணியிலிருந்து  தாய்-சேய் நல அலுவலர் 50 : 50 கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு 15 முதல் 20 நாளில் குழு அமைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஏற்கனவே நாங்கள் அதிகாரிகள் மட்டத்தில் பேசி எதுவும் நடக்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, மனச் சுமைகளை போக்கி சுமுக தீர்வு தந்துள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.