Skip to main content

“தேர்தல் முடிந்து ஒருமாத காலமாகியும் அரசு இதனை செய்யவில்லை” - வேதனையில் காவல் அதிகாரிகள்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

"The government has not done this for a month after the election" - Police officers in pain

 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை மற்ற மாவட்டத்திற்கும் அல்லது மாவட்டத்திற்குள் பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சப் - இன்ஸ்பெக்டர்களைப் பணியிடமாற்றம் செய்தனர். சப் - இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளிலும் பணியிடமாற்றம் செய்தனர்.

 

இதில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தலைமை தேர்தல் அதிகாரி வாபஸ் வாங்கிய பிறகு தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்திற்கோ அல்லது மாவட்டத்திற்குள் வேறு இடத்திற்கோ மாற்றம் செய்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு மேலாகியும் தேர்தல் பணிக்காக சென்ற போலீசாரை இன்னும் மாற்றம் செய்யவில்லை. கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவிவந்த காரணத்தால் தேர்தல் பணிக்காக மாற்று இடத்திற்குச் சென்றவர்கள் தற்போதுவரை அதே இடத்தில் பணிபுரிந்துவருகின்றனர். இதனால் சப் - இன்ஸ்பெக்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

அவர்களின் குடும்பங்கள் ஒரு இடத்திலும், பணி வேறு இடத்திலும் இருப்பதால் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். மேலும், 50 வயதிற்கு மேல் உள்ள சப் - இன்ஸ்பெக்டர்கள் கரோனா காலத்தில் வீட்டிற்கும் பணிபுரியும் இடத்திற்கும் சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் அவர்களை சரிவர கவனிக்க முடியாமல் இருப்பதாகவும் போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தேர்தல் பணிக்காக மாற்றிய போலீசாரை ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கோ அல்லது புதிய இடத்திற்கோ இடமாற்றம் செய்ய வேண்டும் என்று போலீசார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.