Skip to main content

வெற்றி பெற்ற ஆறு மாதத்திலேயே அரசு கல்லூரி-தொகுதி மக்களை அசத்திய அமைச்சர் சக்கரபாணி!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Government College within six months of winning! Minister Chakrabani

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்றதன் மூலம் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியைப் பெற்றார் சக்கரபாணி.

 

Government College within six months of winning! Minister Chakrabani

 

அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து தனது தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொடுத்துவந்ததுடன் மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்கள் மனதிலும் நல்ல பெயர் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் கடந்த தேர்தலின்போது தொகுதி மக்கள் தங்கள் பகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு அமைச்சர் கொண்டுபோனதின் பேரில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். அதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் இரண்டு கல்லூரிகள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பூரித்துப்போய் விட்டனர்.

 

Government College within six months of winning! Minister Chakrabani

 

அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்திலிருந்து தேவத்தூருக்கும், அதுபோல் பழனியிலிருந்து கள்ளிமந்தையம், தேவத்தூர் வழியாக ஈரோடு உள்பட சில பகுதிகளுக்கு புதிய பேருந்துகளையும் துவக்கி வைத்தார். ஒரு கல்லூரிக்கு இரண்டு கல்லூரிகளைக் கொண்டு வந்த அமைச்சர் சக்கரபாணியைத் தொகுதி மக்கள் எங்குப் பார்த்தாலும் பாராட்டி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணியும் முதன் முதலில் தாராபுரம் ரோட்டில் உள்ள சின்னையாகவுண்டன் வலசில் கல்லூரி அமைக்க அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி கல்லூரி தொடங்குவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதோடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்பட அதிகாரிகளும், கட்சிக்காரர்களும், தொகுதி மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வெற்றிபெற்ற 6 மாதத்திலேயே தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அரசு கல்லூரியை அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.