Skip to main content

உத்தரவை மதிக்காத போக்குவரத்துக் கழகம்; அதிரடி காட்டிய நீதிமன்றம்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

government bus has been confiscated for the 2nd time in Coimbatore

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ்(24) பி.ஏ பட்டதாரியான இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். சதீஷ் தினந்தோறும் தனது பைக்கில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே சதிஷ் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டார். மேலும், இதில் பலத்த காயமடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே சமயம், சதீஷின் உடலை பார்த்து கண்ணீர்விட்டுக் கதறிய அவரது பெற்றோர், தன் மகனின் இழப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019ஆம் ஆண்டில் சதீஷ் குடும்பத்தினருக்கு 12 லட்சம் ரூபாய் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காததால், வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் வழங்கக் கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் சதீஷின் குடும்பத்தினர்.

 

அதன்பிறகு வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 7.40 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அந்தத் தொகையை ஒரு மாதம் ஆகியும் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கிடையில், 2 ஆவது முறையாக தற்போது  அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.