Skip to main content

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக செயல்படுகிறது எடப்பாடி அரசு -கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில்  கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் நாடாளுமன்ற. சட்டமன்ற இடை தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளது. 46 இடங்களில் வாக்களிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறிய தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மட்டும்தான் மறு தேர்தல் நடைபெற உத்தரவிட்டுள்ளது.  சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்களிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது தேர்தல் ஆணையம் முன்னுன்னு பின்னாக பேசி வருகிறது. 

 

 

 The government acts in harmony with the hydrocarbon project- The government acts in harmony with the hydrocarbon project

 

 

தேர்தல் ஆணையம் முறையான வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.  தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் கைப்பாவையாக செயல்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை அச்சமான சூழ்நிலையே உள்ளது.  தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தலைதூக்கியுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் நடந்து இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை  மக்கள் பிரதிநிதிகள் ஈடுகொடுத்து சரி செய்து இருப்பார்கள்.  தற்போது மக்கள்  குடிநீருக்கு  அகதிகள் போல் அலைகிறார்கள்.  வரும் 23 ஆம் தேதி பிறகு ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும். 

 

மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது மக்களின் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல், வன பாதுகாப்பு உள்ளிட்ட எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும்.  மற்ற நாடுகளில் மக்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல் படுத்த வில்லை.  இங்கு மக்கள் வாழும் பகுதியில் மக்களை அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.  எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தியும் திட்டத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கும் வகையில்  டெல்டா  பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளது.  இதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

 

 கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  வீட்டிலுள்ள பெண்கள் பாலியல் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.  மாணவி கொலையில் ஆகாஷ் என்ற இளைஞரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள்.  இது சமூக வலைதளங்களில் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.  பின்னர் கைது செய்யப்பட்ட ஆகாஷ் தரப்பில் மாணவியும், நானும் காதலித்தது உண்மைதான் ஆனால் கொலை செய்ய அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே காவல்துறையினர்  இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.  தமிழக அரசு குடும்பத்திற்கு நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

 The government acts in harmony with the hydrocarbon project- The government acts in harmony with the hydrocarbon project

 

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் ஆனால் மேட்டூரில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  காவிரி ஆணையத்தை கூட்டி தென்மேற்கு பருவ மழை பெய்யும் போது நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கேட்டு பெற்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க எந்த அக்கறையும் காட்டவில்லை. கோடை காலங்களில் நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து பணிகள் செய்து இருந்தால் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கலாம்.  யாகம் நடத்தினால் மழை வரும் என்பதை சொல்வதற்கு அரசு அதிகாரிகள் எதற்கு?  எல்லா பிரச்சினைக்கும் யாகம் வளர்த்து சரி செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.  அப்படியே மழை வந்தாலும் கடலுக்கு தானே அந்த தண்ணீர் செல்லும் பொறுப்பற்ற நிலையில் அரசு நடந்து கொள்கிறது.

 

 

 சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் பேரன் ஆகியோரின் வீடுகளை அரசு காலி செய்யும் முன்  மாற்று வீடு கொடுத்துவிட்டு  காலி செய்து இருக்க வேண்டும். அவர்களுக்கு உடனே வீடு வழங்க வேண்டும்.  இதனை நிதானமாக அரசு கையாள வேண்டும்.  புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தைரியமாக முதல்வர் நாரயணசாமி அறிவித்துள்ளார் ஆனால் தமிழக முதல்வர் பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆமாம் சாமி போட்டு வருகிறார்.  இவர் மட்டுமல்ல இவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக  உள்ளனர்.  இவர்களது தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு மோடியிடம் உரலில் மாட்டிய தலை போல் உள்ளனர். 

 

 ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு ரூ150 கோடி வரை செலவு செய்கிறார்கள் இதில் ஜனநாயகம் இல்லை., பணநாயகமாக உள்ளது. அப்படியே ஆட்சி இருந்தாலும்  ஒன்றரை வருடம் தான் அதுவும் 23ம் தேதிக்குப் பிறகு மாறக் கூடிய சூழல் உள்ளது.  தேர்தலுக்கு செலவு செய்யும் ரூ 150 கோடி ரூபாய் வைத்துக் கொண்டு அத்தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை செலவு செய்தாலே மக்கள் சிறப்பாக வாழ்வார்கள் என பேசினார் இவருடன் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கற்பனை செல்வம், நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு முத்து, சிஐடியு ஆட்டோ சங்க கிளை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உடன்  இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.