Skip to main content

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்கள் மீது குண்டாஸ்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Goondas act register two youths who 12th school girl incident

 

தர்மபுரி அருகே, பிளஸ்2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம் இண்டூரைச் சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவர், கடந்த நவ. 17ம் தேதி, பள்ளிக்கு ஒற்றையடி பாதையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் மாணவியை வழிமறித்து அருகில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். ஒரு கட்டத்தில் மாணவி மயக்கம் அடைந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது அரைநிர்வாணமாக கிடந்த மாணவியின் முனகல் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.     

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், மாணவியை  வன்கொடுமை செய்த இண்டூரைச் சேர்ந்த சேகர் மகன் சவுகத் (20), அவருடைய கூட்டாளி மனோகரன் மகன் குமரேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.     

 

இந்நிலையில், சவுகத், குமரேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை எஸ்பி கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் சாந்தி இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, சவுகத், குமரசேன் ஆகியோரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணையின் நகல் வழங்கப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.