Skip to main content

திருவிழாவிற்கு வந்த சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு-பெண்ணாடத்தில் சோகம்!

Published on 03/07/2022 | Edited on 03/07/2022

 

cuddalore district

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 37) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி (13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) என ஐந்து பெண் குழந்தைகளும், 4 வயதில் சிவபெருமாள் என ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பெருமாளின் மனைவி பிறந்த ஊரான திருமலை அகரம் கிராமத்தில் தீமிதி திருவிழா நடந்ததால் பெருமாளின் மனைவி கன்னியாகுமரி மற்றும் அவரது மூத்த மகள் முத்துலட்சுமி, இரண்டாவது மகள் சிவசக்தி ஆகியோருடன் தாய் வீட்டிற்கு சென்று தீமிதி திருவிழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். நேற்று முன்தினம் அக்கிராமத்தில் மஞ்சள் நீராட்டு விளையாட்டு என்பதால் குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

 

தொடர்ந்து இரவு முத்துலட்சுமி மற்றும் சிவசக்தி இருவரும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த தாய் கன்னியாகுமரி மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தனர். இரண்டு குழந்தைகளும் காணவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருமலை அகரம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்து விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் அந்தக் குழந்தைகள் பெருமாள்-கன்னியாகுமரி தம்பதியரின் குழந்தைகள் என்பதும், பெ.பூவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணாடம் போலீசார் முத்துலட்சுமி, சிவரஞ்சனி ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்களை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.