Skip to main content

''எங்களுக்கு தனியா கொடுங்க...'' - திருச்சி மதுபானம் பாரில் ரகளையில் ஈடுபட்ட பெண்கள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

ddd

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காரைக்குடி உணவக மாடியில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது டியூக்ஸ் பார் (தனியார் மதுபானம் குடிக்கும் கடை). இங்கு அரசு அதிகாரிகள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் வந்து வழக்கமாக மது அருந்திவிட்டுச் செல்வார்கள்.

 

அதேபோல், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தக் கடைக்கு மூன்று பெண்கள் அரைக்கால் சட்டையுடன் வந்து மது அருந்துவது வழக்கம். மேலும் மது அருந்திவிட்டு மூன்று பெண்களும் நடனமாடிவிட்டு செல்வார்கள். அவர்கள் நடனமாடும்போது மது அருந்த வரக்கூடிய வாலிபர்கள் சிலர் அவர்களைக் கிண்டல் செய்வது, கையைப் பிடித்து இழுப்பது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்கள் நடந்தாலும் நிர்வாகமே அதை சரி செய்துவிடும்.

 

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (19.04.2021) இரவு அந்த மூன்று பெண்களும் மது அருந்திவிட்டு நடனம் ஆடியபோது, இளைஞர்கள் அந்தப் பெண்களில் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

தகவல் கிடைத்த சில நிமிடங்களில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இருந்து பெண் காவலர்கள் மதுபான விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது மூன்று பெண்களும் குடிபோதையில் இருந்துள்ளனர். அவர்களைப் பெண் போலீசார் மாடியிலிருந்து கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதேபோல் அவர்களிடம் அத்துமீறிய இளைஞர்களையும் காவல்துறையினர் கீழே அழைத்து வந்துகொண்டிருந்தனர். இதனிடையே, இந்த விவகாரம் பற்றி அறிந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த அந்த மூன்று பெண்களையும் பாதுகாப்பாக ஆட்டோவில் அனுப்பி வைத்தார். மேலும் அத்துமீறிய இளைஞர்களை எச்சரித்தும் அனுப்பியுள்ளார். 

 

அந்த மூன்று பெண்கள் மீது இதுவரை எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. மது போதையில் இருந்த அவர்களிடம் கேட்டபோது, ''ஏன் பெண்கள் குடிப்பதற்கு உரிமை இல்லையா? பெண்கள் குடிப்பதற்கு தனியாக பகுதியை ஒதுக்கிக் கொடுங்கள்'' என பெண் போலீசாரிடமும் நிர்வாகத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மூன்று பெண்கள் யார்? உதவி செய்த போலீசாருக்கும் அந்தப் பெண்களுக்கும் என்ன தொடர்பு? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.