Skip to main content

தந்தையை கொன்ற மகள் விடுதலை! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Girl has been released from police custody in father case

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கடேசன், தனது இளைய மகளிடம் வரம்பு மீறி நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது மகள் அருகிலிருந்த கத்தியால் தனது தந்தையின் மார்பில் குத்தியுள்ளார். அதில் 11 அங்குலம் ஆழத்திற்கு அந்தக் கத்தி அவரது நெஞ்சில் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகள் தான் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

 

கைது செய்யப்பட்ட அவர், போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர், “எனது தாய் இறந்த பிறகு, பாட்டி வீட்டில் தான் நானும் என் சகோதரியும் வளர்ந்து வந்தோம். அவர் தற்போது சென்னையில் வேலை செய்து வருவதால் நான் பாட்டி வீட்டில் தங்கி இருந்தேன். தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால் நான் படிக்கும் அவலூர்பேட்டை பள்ளிக்குச் செல்வதற்குப் பாட்டி வீட்டிலிருந்து தினசரி சென்று வருவதற்குச் சிரமம் ஏற்பட்டது. அதனால் எனது சொந்த ஊரிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்தேன்.

 

இந்த நிலையில் எனது தந்தை, தான் பெற்ற மகளென்றும் பாராமல் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அவரிடமிருந்து அவ்வப்போது தப்பித்து வந்தேன். ஆனால், சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த என்னிடம், தந்தை குடிபோதையில் எல்லை மீறி நடந்து கொண்டார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகப் போராடினேன். ஆனால், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகில் கிடந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்து போனார். அப்போது செய்வதறியாது திகைத்த நான், பக்கத்து வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இதை எப்படி வெளியே சொல்வது என்று புரியாமல் மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அப்போதுதான் நான், அவரை யாரோ கத்தியால் குத்தியது போல நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று நடந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட காவல் காவல்துறை, ‘இந்தியத் தண்டனைச் சட்டம் விதி 100ன் கீழ்’ ஒரு பெண் தனியாக இருக்கும்போது, அவரது கற்புக்கு ஆணிடமிருந்து தீங்கு ஏற்படுமானால் அவரிடமிருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலையில், தன்னை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடந்து கொள்ளலாம். அப்படி நடந்துகொண்ட பெண்களுக்குத் தண்டனைச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உள்ளது. அதனடிப்படையில் மாணவியைக் கைது செய்து விடுதலை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். மேலும் அவருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என அவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.