Skip to main content

இளம்பெண் கடத்தல்!! போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது...

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
police

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படித்த மாணவி, வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி இரவு 7 மணியில் இருந்து அந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை செஞ்சி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகளை வடபாலைகிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை மறைமலை நகரில் தங்கியிருந்த செந்தில்குமாரையும், அந்த மாணவியையும் போலீசார் மீட்டு வந்தனர். செஞ்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த மாணவியை செந்தில்குமார் காதல் வலை விரித்து ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது. 

 

இதற்கு சிவலபுரை கிராமத்தை சேர்ந்த 22 வயது அண்ணாமலை என்ற இளைஞர் உடந்தையாக இருந்துள்ளார். மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் செந்தில்குமாரின் நண்பர்கள் அண்ணாமலை மற்றும் கீழ் மலையைச் சேர்ந்த மணிமாறன் அதே ஊரைச் சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் துணையுடன் செந்தில்குமார் அந்த மாணவியை மறைமலைநகரில் உள்ள ஒரு பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று அந்த மைனர் பெண்ணுக்கும், செந்தில் குமாருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு அந்த மாணவர்கள் மணமக்களுக்கு தனி வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளனர். அந்த தனி வீட்டில், அந்த மைனர் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து செஞ்சி போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த செந்தில்குமார், அவருக்கு உதவிய நண்பர்கள் அண்ணாமலை, மணிமாறன், வாசுதேவன் ஆகிய நான்கு பேர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மைனர் பெண் கடத்தல், அவருக்கு கட்டாய திருமணம் செய்தல், அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின்கீழ், நான்கு பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மைனர் பெண் கடத்தல் சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.