Skip to main content

“மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு!” - அமைச்சர் சக்கரபாணி உறுதி 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

"Geo-code for mapillai samba rice!" - Minister sakkarabani

 

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்து இருக்கிறார்.


திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் இருக்கும் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் இரண்டு நாள் தேசிய நெல் திருவிழாவின் நிறைவு விழா நடைபெற்றது. நெல் பாதுகாப்பு மைய உயர் மாவட்ட குழு தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். விழாவில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுங்களை வழங்கினார். 


இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், “இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்தோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இயற்கை விவசாயத்திற்கு 400 கோடி நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கினார். இன்று இயற்கை விவசாயத்தை மக்கள் நாடுகிறார்கள். நெல் பாரம்பரியத்தை காத்த நம்மாழ்வார். நெல் ஜெயராமன் மறைந்தாலும் இந்த உலகம் இருக்கும் வரை அவர்கள் பெயர் மறையாது. அப்படி பாதுகாத்த நெல் ரகங்களை பரவலாக்க விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வழங்கி பரவலாக்கி வருகிறார்கள். 


எப்போதும் ஜூன் இரண்டாம் தேதி தான் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வரும் 24ஆம் தேதி முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் முன்கூட்டியே அறுவடை பணிகள் நடந்து மழை பாதிப்பு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நெல் ஜெயராமன் பாதுகாத்த மாப்பிள்ளை சம்பா பலகோடி வருமானம் பெரும் மதிப்பு வாய்ந்த ஒன்றாக சந்தையில் மாறி இருக்கிறது. 


பாரம்பரியமிக்க தனித்துவமான ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் அடையாளம்தான் புவிசார் குறியீடு. இது பொருளுக்கு நம்பகத் தன்மை குறிக்கிறது. சேலம் மாம்பழம், பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் மாப்பிள்ளை சம்பாவுக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாப்பிள்ளை சம்பா நம்மை தவிர வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இதனால் உலக அளவில் மாப்பிள்ளை சம்பா ஏற்றுமதி நடைபெறும்” என்று கூறினார்.


இந்த விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.