Skip to main content

பணத்திற்காக நண்பனை கடத்திய கும்பல்.. தீவிர தேடலில் காவல்துறையினர்.. 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

The gang who kidnapped a friend for money .. Police in intensive search ..

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் உள்ள சிங்கப்பூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர், அப்பகுதியில்  வட்டிக்கு விடும் தொழில் செய்துவருகிறார். இதன் காரணமாக அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. 

 

கிருஷ்ணவேணியின் மகன் சூரியகுமார். இவர் தனது நண்பர்களான சூர்யா, நந்தா, பெரிய பாலா, மாரி, முரளி ஆகியோருடன் அடிக்கடி டீ குடிக்க செல்வதுண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சூரியகுமாரை டீ குடிப்பதற்காக மேற்படி நண்பர்கள் வழக்கம்போல் அழைத்துள்ளனர். சூரியகுமாரும் அவர்களுடன் டீ குடிக்கச் சென்றுள்ளார். 


ஜானகி புறம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்ததும் சூரியகுமாரை ஒரு காரில் கட்டாயமாக திணித்துக் கொண்டு கரடிபாகம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சூரியகுமாரை சுற்றி உட்கார்ந்த ஐந்து நண்பர்களும், சூரிய குமாரிடம் உனது தாய் கிருஷ்ணவேணியிடம் 10 லட்சம் பணம் கேட்டு கொண்டு வரும்படி கூறுமாறு மிரட்டியுள்ளனர். மேலும், சூரியகுமாரை அடித்து மிரட்டி தாயிடம் பணம் கேட்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உயிருக்கு பயந்து போன சூர்யகுமார், தனது தாய் கிருஷ்ணவேணிக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், மீட்க பணம் தரும்படியும் கேட்டுள்ளார். 


மகனின் நிலையை கேட்டு பதறிப்போன கிருஷ்ணவேணி, மாவட்ட காவல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக தாலுகா காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் ஆலோசனையின்படி 10 லட்சம் பணத்தை தயார் செய்தார் கிருஷ்ணவேணி. பணம் தயாராக இருப்பதாக மகனுக்கு செல்போனில் தகவல் அளித்தார். அப்போது கிருஷ்ண வேணியிடம் பேசிய கடத்தல் கும்பல், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள எல்லீஸ் சத்திரம் பகுதிக்கு தனியாக நள்ளிரவு நேரத்தில் பத்து லட்சம் பணத்துடன் வரவேண்டும் காவல்துறை உதவியை நாடினால் மகன் உயிருக்கு ஆபத்து என்றும் மிரட்டியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி 10 லட்சம் பணத்துடனும், போலீசாரின் அறிவுரைப்படியும் மர்ம நபர்கள் கூறிய எல்லிஸ் சத்திரம் பகுதிக்கு கிருஷ்ணவேணி நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளார். போலீசாரும் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் இருந்து சூரியகுமாரை கீழே இறக்கினர். அப்போது போலீசார் கிருஷ்ணவேணியுடன்  இருப்பதை கண்டதும், அந்த கும்பல் தப்பி சூரியகுமாரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. 

 

மர்ம கும்பலால் தாக்குதலுக்கு ஆளான சூரியகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். சூரியகுமார் அளித்த புகாரின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப் பதிவு செய்ததோடு விழுப்புரம் டி.எஸ்.பி சிலம்பரசன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.