Skip to main content

திருமணத்திற்கு வந்த இடத்தில் வீடு புகுந்து திருடிய கும்பல்! 

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

The gang who broke into the house and stole

 

கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி முனியப்பனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது மனைவியையும் தாக்கி அவரது மனைவி கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். 

 

இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 19ஆம் தேதி இருவரை பிடித்து வேப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பிரேமலதா(29), அவரது உறவினர் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன்(29) எனத் தெரியவந்தது. 

 

மணிகண்டன், வேப்பூரில் தங்கி கடை ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூன் மாதம் தம்பி திருமணத்திற்காக தஞ்சாவூர் பகுதியிலிருந்து பிரேமலதா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் வந்துள்ளனர். திருமணத்திற்கு வந்த இடத்தில் ரமேஷ் அவரது மனைவி பிரேமலதா, மணிகண்டன் ஆகிய 3 பேரும் முனியப்பன் வீட்டில் திருடுவதற்கு நோட்டமிட்டனர். திட்டமிட்டபடி ஜூன் மாதம் 29 ஆம் தேதி இரவு மணிகண்டன் ரமேஷ் ஆகியோர் முனியப்பன் வீட்டிற்குள் புகுந்து அவர்களை தாக்கி அவரது மனைவி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துச் சென்றனர். 

 

பிரேமலதா, மணிகண்டன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் முனியப்பனின் வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். நகையை பறித்துக்கொண்டு ரமேஷ், பிரேமலதா ஆகிய இருவரும் தஞ்சாவூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். போலீசாரிடம் பிடிப்பட்ட அவர்களிடமிருந்து 6 சவரன் நகை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு வழக்குப் பதிந்து ரமேஷ், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். தலைமறைவான ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.