Skip to main content

ஏமாற்றத்தால் நிதி நிறுவனத்திற்கு விபூதி அடித்த திருடர்கள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

gang tried to steal money from a private financial institution in Vellore

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுள்ளனர் 

 

நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க நினைத்து பல நாட்கள் நோட்டமிட்ட மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு அதிகமாக வசூல் பணம் இருக்கும் என நினைத்து கைரேகை பதிவு ஆகக்கூடாது என்பதற்காக விபூதி மற்றும் குங்குமம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு சென்று நிதி நிறுவன கதவை உடைத்துச் சென்ற  மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தில் உள்ளே இருந்த பீரோவில் எவ்வளவு நேரம் தேடிப்பார்த்தும் அதில் பணம் இல்லை; வெறும் கணக்கு புத்தகங்கள் மட்டுமே இருந்ததுள்ளது.

 

மேலும் அருகில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால்  ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் கைரேகை தெரியாமல்  இருக்க எடுத்து வந்த விபூதி குங்குமத்தை விரக்தியில் கதவு மற்றும் பீரோ உள்ளிட்டவற்றில் விபூதி அடித்து விட்டு ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பிச் சென்றுள்ளனர் இதனை அடுத்து இன்று வழக்கம் போல் ஊழியர் ஒருவர் வந்து பார்த்த பொழுது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் திருட முயற்சி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.