Skip to main content

நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய குற்றவாளிகளின் மீது கொலைவெறி தாக்குதல்

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

gang beating two people who came out after appearing in court

 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் ஆஜராக வந்த இளைஞர்கள். ஆஜராகி வீடு திரும்புகையில் சரமாரியாக 6 மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். 

 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா வழக்கிற்காக ஆஜராக, கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்த 22 வயதான நிதீஷ் குமார் வந்திருந்தார். நிதீஷ் மேல் இரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் விற்பனை முதலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடன், காந்திபுரத்தைச் சேர்ந்த நண்பர் ரஞ்சித்குமாரும்(22) நேற்று நீதிமன்றம் வந்தார். ரஞ்சித் குமார் மீதும் பெண் வன்கொடுமை , கஞ்சா விற்பனை வழக்கு போன்ற வழக்குகள் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் உள்ளது. இவர்களுடன் கார்த்திக் என்பவரும் சேர்ந்து நீதிமன்றம் சென்றுள்ளார். இவர்கள், நிதீஷ்குமார் வழக்கு நடந்து வரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்திற்கு நேற்று உடன் வந்துள்ளனர்.

 

தொடர்ந்து, ரஞ்சித் குமாரின் வழக்கும் அங்குள்ள மகளிர் நீதிமன்றத்தில் தான் வாதிடப்பட்டு வருகிறது. எனவே, ரஞ்சித்தும், நிதீஷ் குமாரும் தங்களின் வழக்குகளுக்கு ஆஜராகி விட்டு தனது நண்பர் கார்த்தியுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் காந்திபுரம் பயணித்தனர். மூவரும் நஞ்சப்பா சாலை அருகே சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இரண்டு வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.

 

இதனையறிந்த மூவரும் வண்டியில் வேகமாகச் சென்ற போது நிலை தடுமாறி கீழே சரிந்தனர். அப்போது, மூவரையும் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைக்க கார்த்தி மட்டும் அங்கிருந்து தப்பியோட, ரஞ்சித்தும், நிதீஷ் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர். பின்பு இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முன் விரோதத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்ற கோண்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்