Skip to main content

விநாயகர் சிலை ஊர்வலம்; ஈரோடு மாநகர் பகுதியில் 500 போலீசார் குவிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Ganesha Statue Dissolving Procession; 500 police in Erode metropolitan area

 

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈரோட்டில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1,429 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஈரோடு மாநகரில் மட்டும் 185 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதற்காக மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 185 விநாயகர் சிலைகளும் ஈரோடு சம்பத் நகருக்கு நேற்று வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. பின்னர், ஊர்வலமானது ஈரோடு சம்பத் நகர் நால் ரோட்டில் துவங்கி, பெரியவலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. சாலை, காவிரி சாலை, கருங்கல்பாளையம், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனைச் சாவடி வழியே காவிரி ஆற்றின் பழைய பாலம் பகுதிக்குச் சென்றடைந்தது. அங்கு ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.

 

காவிரி ஆற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்திற்கும், ஊர்வலம் செல்லும் பாதைகளிலும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க 500 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்காக போக்குவரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஊர்வலம் செல்லும்போது அந்த சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,429 சிலைகளில் நேற்று  வரை 770 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டா மாற்றம்; கொந்தளித்த மக்கள் - அடியோடு ஸ்தம்பிப்பு!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

patta document issue nellai

 

டவுன் சர்வே ஆவணத்தில் பட்டா மாற்றப்பட்டதால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் ஒரு பகுதிவாசிகள்.

 

சங்கரன்கோவில் பகுதியில் உள்ள காந்தி நகர், கக்கன் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலம் காலமாக வசித்து வருகின்றனர். அந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள நெல் களத்தை விவசாயப் பணிகளுக்காக பலகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அரசு தரப்பில் கையகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிந்ததுடன், அதற்காகவே ‘களம்’ என்றிருக்கும் நிலத்தை கழிப்பிடம் என்று டவுன் சர்வே ரிப்போர்ட்டான டி.எஸ்.ஆர். படி பட்டா மாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

அதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நகரின் தேரடித் திடலில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தேரடி திடலில் உண்ணாவிரதமிருக்க போராட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது போலீஸ் நிர்வாகம். ஆனாலும் தடையை மீறி நேற்று மைதானத்தில் கக்கன் நகர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 14 ஊர் நாட்டாமைகள் தலைமையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் மற்றும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தகவல் போய் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமாரும் ஸ்பாட்டுக்கு முன்னதாக வர, அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

patta document issue nellai

 

கொந்தளிப்பான நிலையில் கழுகுமலை சாலையிலிருந்து நெல்லை சாலையை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்திற்குப் பின்பு பழைய தாலுகா அலுவலகம் முன்னே போலீசார் அந்த மக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்ய, போலீசுக்கும் பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கழுகுமலை, நெல்லை பிரதான சாலைகள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் காரணமாக மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆத்திரமான மக்கள் தடுப்புகளை மீறித் தேரடித் திடலுக்குச் சென்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேசக் குரலெழுப்பினர்.

 

காலை 10 மணிக்கு ஆரம்பித்த மக்களின் மறியல் போராட்டம் மதியம் இரண்டு மணி வரை நீடித்தது. சுமார் மூன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் பதற்றம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; நண்பனைக் கொன்று புதைத்த இளைஞர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

youth incident his friend in Tirupattur

 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ளது பலக்ல்பாவி. இங்குள்ள முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று ஆடு மேய்க்கச் சென்றவர்கள், குழி ஒன்றில் அரைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளத்திலிருந்து துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்ப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்து யாரோ புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதனை பெரியவர் ஒருவர் குச்சியால் தோண்டியுள்ளார். அப்போது மனித கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

உடனடியாக திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் வந்தனர். வருவாய்த்துறையினர் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று உடலில் துணி எதுவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். உடல் தோண்டியெடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் கொல்லப்பட்டவரை அடையாளம் காண முடியாத நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.            

 

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மல்லகுண்டா அடுத்த சுண்ணாம்பு காரகொள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகன் விஜயகுமார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காணவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் எனப் புகார்  கொடுத்தார். புகாரில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மேஸ்திரி வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. விஜயகுமார் மலேசியா சென்று வேலை பார்த்து வந்தவர், அது செட்டாகாமல் ஐந்து மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பியதாகவும் இரண்டு மாதங்களாகச் சொந்த ஊரில் இருந்து வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.          

 

விஜயகுமார் அவரது மனைவி வினிதா(25) என்பவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த தீபாவளி அன்று கணவனுடன் சண்டையிட்டு அவரது தாய் வீடான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கடந்த 21 ஆம் தேதி கொன்று புதைக்கப்பட்ட நபர் ராஜாவின் மகன் விஜயகுமார்(29) என்பதும் அவர் காட்டிய அடையாளங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து போன விஜயகுமாரின் செல்போன் நம்பர்களை கண்காணித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த நம்பர் அவருடைய நண்பரான திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன்(24) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.

 

இறந்து போன விஜயகுமாரின் மனைவி வினிதாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரனிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தேன். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ராகவேந்திரனும் நானும் ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி தனிமையில் இருந்தோம். அப்போது என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு என்னை டார்ச்சர் செய்து வருவதாக அவரிடம் கூறினேன். நான் பார்த்துக்கறன்னு ராகவேந்திரன் சொன்னார். கடந்த 19 ஆம் தேதி ராகவேந்திரன் விஜயகுமாருக்கு போன் செய்து தனியாக வரவழைத்து அவருக்கு மது பாட்டில்களை வாங்கி கொடுத்து கொலை செய்து மண்ணில் புதைத்து விட்டு தலைமறைவாக ஆனது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது எனக் கூறியதாக தெரிகிறது.            

 

அதனைத் தொடர்ந்து ராகவேந்திரனை பிடித்த காவல்துறையினர், கொலை எவ்வாறு நடந்தது, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த துணி ஆகியவற்றை கைப்பற்றி அவருக்கு உதவிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரையும் கைது செய்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்