Skip to main content

காவிரியில் நீர் திறப்பு மேலும் குறைப்பு; ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையால் அதிர்ச்சி

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

A further reduction in the amount of water released to Tamil Nadu; Shocked by the recommendation of the Cauvery Commission

 

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

முன்னதாக அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்திலும், காவிரி மேலாண்மை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதலில் 12,000 கன அடி திறக்க சொன்னீர்கள் இப்பொழுது 5,000 கன அடி நீர் திறந்துவிட சொல்கிறார்கள். ஏன் இப்படி குறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. காவிரி ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் 5,000 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. காவிரி ஒழுங்காற்று குழு முறையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா? என்று மத்திய அமைச்சரிடம் கேட்டேன்'' என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை 5,000 கன அடியிலிருந்து மேலும் குறைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் 3000 கன அடியாக திறந்து விட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்த கவுண்டவுன்; 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

next counten; Alert to 28 districts in 3 hours

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், வரும் டிசம்பர் இரண்டாம் தேதி கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையை அடித்து துவைக்கும் மழை

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

nn

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

7 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை மயிலாப்பூர், சாந்தோம்,மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், அம்பத்தூர், சேத்துப்பட்டு, சேப்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி ,பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளான செம்பரம்பாக்கம், பூவிருந்தவல்லி, திருமழிசை, திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் மழை பொழிந்து வருகிறது.

 

விழுப்புரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் வளவனூர், கண்டமங்கலம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, காணை, அரசூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்