Skip to main content

செய்தித் துறையினரின் செயல்பாடு! உளவுத்துறை ரகசிய விசாரணை! 

Published on 23/07/2021 | Edited on 23/07/2021
The function of the news department! Intelligence secret investigation

 

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும், பி.ஆர்.ஓ.,க்கள் மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை போலீசார் ரகசியமாக விசாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை அரசிடம்  கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செய்தி மக்கள் தொடர்புத்துறையில், தி.மு.க. ஆதரவு  பி.ஆர்.ஓ., ஏ.பி.ஆர்.ஓ.,க்களுக்கு டிரான்ஸ்பர், புரோமோசன் உள்ளிட்டவைகளில் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர்,   பாரபட்சம் காட்டுவதாகவும், அவர்கள் மீது பழிவாங்கும் நோக்குடன் நடந்து கொள்வதாகவும், அ.தி.மு.க. ஆதரவு பி.ஆர்.ஓ.க்கள், ஏ.பி.ஆர்.ஓ.,க்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் சிபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் புகார் எழுந்தது.

 

வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம் வெளியிட்டதில் இவர் பல கோடி கமிஷன் பெற்றதாகவும், முன்னாள் கூடுதல் இயக்குநர் எழிலழகனின் உத்தரவிற்கிணங்க செயல்படுவதாவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது.  இது குறித்து, செய்தித்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் சிலர், முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில்   சந்தித்து முறையிட்டனர். சந்தித்த அனைவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிச்சயமானவர்கள்தான். இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செய்தி துறையில் பணியாற்றும் பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் செயல்பாடு குறித்து, ரகசியமாக விசாரித்து அறிக்கை தர உளவுத்துறை போலீசாருக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு  பிறப்பித்தது. 

 

பி.ஆர்.ஓ., மற்றும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களின் குடும்ப அரசியல் பின்னணி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக பணியாற்றுகிறார்களா? அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களிடம் தொடர்பில் உள்ளார்களா? அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா? அரசுக்கு எதிரான செய்திகளை பரப்புகிறார்களா? அரசுக்கு ஆதரவான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுகிறார்களா? அல்லது சுணக்கமாக இருக்கிறார்களா?  செய்தி வெளியிடுவதற்காக மற்ற துறை அதிகாரிகளிடம் காசு வாங்குகிறார்களா?  

 

அரசு அதிகாரிகளிடம் டிரான்ஸ்பர், புரமோசன் மற்றும் வேலை வாங்கித்தருவதாக பண வசூலில் ஈடுபடுகிறார்களா?  அமைச்சர் மற்றும் மற்ற துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்களுக்கு பணம் தர வேண்டும் எனக்கூறி வசூலில் ஈடுபடுகிறார்களா?   இவர்களின் செயல்பாடுகள் குறித்து மற்ற துறைகளின் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள்? உள்ளிட்ட  விபரங்களை சேகரித்து  அரசு தலைமைக்கு அனுப்பி  உள்ளனர். இதனால், செய்தி மக்கள் தொடர்பு துறையில்,  பல அதிரடி நடவடிக்கைகள் இருக்கப்போவதாக கூறப்படுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவினால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to children caused by extramarital affairs in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபா (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியே சென்றிருந்த தீபாவின் கணவர் மாலை வீடு திரும்பினார். அப்போது, தீபாவின் கணவர் தனது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும், அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் தீபா கூறியுள்ளார். இதனை கேட்ட தீபாவின் கணவர், அவர்களை எழுப்பாமல் இருந்துள்ளார்.

பின்னர், வெகுநேரம் ஆகியும் எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர், குழந்தகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பிரேத பரிசோதனையில், குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞருடன் வாழ நினைத்த தீபா, அதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதனால், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன், திரும்பி வருவதற்குள் தனது குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீபா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.