Skip to main content

மாற்றுத்திறனாளிகள் திட்டங்களில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Abuse in the programs of the disabled! Request to take action !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், ஒட்டன்சத்திரம் வட்டார மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார். 


இவர் தலைமையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் குழுக்களின் சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தனிநபர் கடன்கள் பெற்று வந்துள்ளனர். இதற்கான மாதாந்திர கடன் தொகையை மாதந்தோறும் செலுத்தி வந்துள்ளனர். இந்த சுய உதவிக்குழு பயிற்றுநராக மகுடீஸ்வரி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர், குழுக்களின் மூலம் கட்டப்படும் கடன் தொகையை வரவு வைக்காமல் கட்டிய பணத்தை விட குறைந்த கணக்கை காட்டி ரசீது கொடுத்துள்ளார். 

 

இதனால் ஜனவரி 5ம் தேதி கார்த்திகேயன் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி கடனை முடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு முழுமையான ரசீது தராமல் உரிய பதில் தராமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஒட்டன்சத்திரம் வட்டார மேலாளர் பிரியா என்பவரிடம் பல முறை புகார் செய்துள்ளார். ஆனால் இது குறித்து வட்டார மேலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் புகார் செய்ததால் இவர்களுக்கு  வரவேண்டிய எந்த ஒரு அரசும் நலத்திட்டங்களும் முறையாக தகவல் தெரிவிப்பதில்லை, வட்டார மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர்  குழுக்களின் சார்பாக கொடுக்கப்படும் கடன் விண்ணப்பங்களை தர மதிப்பீடு செய்யாமல் நிராகரித்து கையூட்டு கேட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். மேலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதியாக இருக்கும் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்காமல் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசின் நலத்திட்டங்களில் முறைகேடு செய்து வருவதாக கூறப்படுகிறது. 


ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் துவங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித செயல்பாட்டிலும் இல்லை. எனவே, இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து செய்து வரும் வட்டார மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பயிற்றுனர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.