Skip to main content

கோடிக்கணக்கில் மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் குவியும் புகார்கள்!!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Fraud in the millions; Complaints piled up in the commissioner's office

 

மதுரை காளவாசலை தலைமையிடமாக செயல்பட்டுவருகிறது வேர்ல்ட் சேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட். இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் பலர் முதலீடு செய்துள்ளனர். இதில் குறிப்பிட்ட நாட்களில் இரட்டிப்பாக பணத்தை திருப்பித் தந்த நிறுவன உரிமையாளர்கள், மேலும் தங்களுக்கு கீழ் உறுப்பினர்களைச் சேர்த்து முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தனர். 

 

இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்று முதலீடு செய்தனர். பிப்ரவரி மாதம்வரை முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தந்த உரிமையாளர்கள், அதன்பிறகு பணம் தரவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டபோது  எந்த தகவலும் தெரிவிக்காமல் ஃபோனைத் துண்டித்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 55 கோடிவரை  முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

புகார் தெரிவித்த பவித்ரா கூறியதாவது, “மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர்கள் ஆனந்தி, செய்யது பாரூக், மனோஜ் ஆகியோர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தை நடத்திவருகின்றனர். நிறுவனத்தில் எங்களைப்போல் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். ரூ. 2,500 முதல் 10 லட்சம்வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் முதலீட்டிற்கு ஏற்ப பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இரட்டிப்பு செய்து தருவதாக உறுதி கூறியதை நம்பி நாங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் என பலரிடம் பணம் பெற்று அவர்களிடம் அளித்துள்ளோம். பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டால் எங்கள் குடும்பத்தினர்மீது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளர்; நடிகர், டாக்டர், அரசியல்வாதி -  யார் இந்த மதுரை சரவணன்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், வேட்புமனு தாக்கல் என்று வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளார் பட்டியலை வெளியிட்டர். அதில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்தவர். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் முகாம் என மதுரையில் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான மருத்துவர் சரவணன், அரசியலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதே படத்தில் இவரும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமானவராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அங்கு ஒருவருடம் இருந்த சரவணன் கடந்த 2016 ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சரவணனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் போஸ் காலமானதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாஜகவில் சேர்ந்தார். கையோடு அவருக்கு பாஜக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவருக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார். மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சரவணனன் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சரவணன், திடீரென அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரையில் விருப்பமனு பெறப்பட்டது. ஆனால், போட்டியிட மதுரை மாவட்டத்தில் அதிமுக சீனியர் நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், விருப்பமனு கொடுத்த சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து எஸ்கேப் ஆகி வந்தனர். 

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

இதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த ஒரே நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான். முக்கிய நிர்வாகிகள் பலரை அதிமுக தலைமை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே மதுரை தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசன் மதுரை தொகுதியில் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி  சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், பிரமாண்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றுவந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவது மதுரை அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.