Skip to main content

அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

ஆறு இளம்பெண்களைத் திருமணம் செய்து கிடைக்கும் பணத்தைப் பங்குபோடும் வியாபாரத் திருமணக் கும்பலை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள் நெல்லை மாநகர தனிப்படை. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவர் பேராசிரியராக வேலைபார்த்து ஒய்வுபெற்றவர். இவரது மகளான விஜிலாராணிக்கும் (33) தூத்துக்குடி மாவட்டத்தின் சாயர்புரம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ள வின்சென்ட் பாஸ்கருக்கும் (40) கடந்த ஆண்டு முக்கிய உறவினர்கள் முன்னிலையில் பாளை பெருமாள்புரம் சர்ச்சில் திருமணமாகியிருக்கிறது. வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினருக்கு 40 பவுன் தங்க நகைகள் 3 லட்சம் ரொக்கம் என அள்ளிக்கொடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜோசப்ராஜ். தம்பதியர் சாயர்புரத்தில் குடியேறினர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இரண்டு மாதத்திற்குப் பின்பு மனைவி விஜிலாராணியிடம் தனியாக வியாபாரம் செய்யப் பணம் வேண்டுமென்றும் அடமானம் வைக்க அவளின் நகைகளைக் கேட்க, கணவரிடம் 40 பவுன் நகையைக் கொடுத்திருக்கிறார் விஜிலாராணி. இதையடுத்து, நகையுடன் வின்சென்ட் பாஸ்கர் தலைமறைவானார். பதறிய விஜிலாராணி தன் பெற்றோர் வீட்டிற்கு நடந்ததைச் சொல்ல, அவர்கள் வின்சென்ட் பாஸ்கரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜிலாராணி நெல்லை கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் கொடுக்க, அதைனையடுத்து போலீஸ் துணைக் கமிஷனரான சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி கயத்தாறில் 4வது மனைவியுடன் வசித்துவந்த வின்சென்ட் பாஸ்கரின் செட்டப் தாயான சாத்தான்குளம் சியோன் மலையைச் சேர்ந்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைச்செல்வி ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் பல பெண்களைத் திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்திருக்கிறது. கரோனா தடை காலத்தைப் பயன்படுத்தி திசையன்விளைப் புரோக்கர் இன்பராஜ் மற்றும் வின்சென்ட் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு விஜிலாராணியை ஏமாற்றித் திருமணம் செய்து, அதில் வரதட்சணையாக கிடைத்த நகை, பணத்தைப் பங்கு போட்டது தெரியவந்திருக்கிறது. புரோக்கர் இன்பராஜ் மூலமாக செட்டப் தாய், செட்டப் சித்தியைக் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளில் 6 திருமணங்களைச் செய்த கல்யாண களவாணி மன்னனின் விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கிடைத்த பணத்தில் தாயாக நடித்தவருக்கு 15 ஆயிரம், செட்டப் சித்திக்கு 10 ஆயிரம், கல்யாண மன்னனும், புரோக்கரும் மீதமுள்ளவற்றைப் பங்கு போட்டிருக்கிறார்கள்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இதுகுறித்து அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, “மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். ஆரம்பத்தில் சாயர்புரம் பணகுடி பகுதியின் திருமணமாகி குழந்தையுடனிருந்த இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வின்சென்ட் பாஸ்கர் பணத்துடன் தலைமறைவானார். அடுத்து களக்காடு, கீழகாடுவெட்டியில் இரண்டு பெண்கள், தூத்துக்குடியில் 5வது, விஜிலாராணியை 6வதாக திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்குத் திட்டமிட்ட புரோக்கர் இன்பராஜை தேடிவருகிறோம்.” என்றார்.

 

இப்படியும் திருமணக் கொள்ளையா? கண்ணைக் கட்டுது சாமியோவ்...!!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.