Skip to main content

அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

ஆறு இளம்பெண்களைத் திருமணம் செய்து கிடைக்கும் பணத்தைப் பங்குபோடும் வியாபாரத் திருமணக் கும்பலை வளைத்துப் பிடித்திருக்கிறார்கள் நெல்லை மாநகர தனிப்படை. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவர் பேராசிரியராக வேலைபார்த்து ஒய்வுபெற்றவர். இவரது மகளான விஜிலாராணிக்கும் (33) தூத்துக்குடி மாவட்டத்தின் சாயர்புரம் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ள வின்சென்ட் பாஸ்கருக்கும் (40) கடந்த ஆண்டு முக்கிய உறவினர்கள் முன்னிலையில் பாளை பெருமாள்புரம் சர்ச்சில் திருமணமாகியிருக்கிறது. வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினருக்கு 40 பவுன் தங்க நகைகள் 3 லட்சம் ரொக்கம் என அள்ளிக்கொடுத்திருக்கிறார் பேராசிரியர் ஜோசப்ராஜ். தம்பதியர் சாயர்புரத்தில் குடியேறினர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இரண்டு மாதத்திற்குப் பின்பு மனைவி விஜிலாராணியிடம் தனியாக வியாபாரம் செய்யப் பணம் வேண்டுமென்றும் அடமானம் வைக்க அவளின் நகைகளைக் கேட்க, கணவரிடம் 40 பவுன் நகையைக் கொடுத்திருக்கிறார் விஜிலாராணி. இதையடுத்து, நகையுடன் வின்சென்ட் பாஸ்கர் தலைமறைவானார். பதறிய விஜிலாராணி தன் பெற்றோர் வீட்டிற்கு நடந்ததைச் சொல்ல, அவர்கள் வின்சென்ட் பாஸ்கரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து விஜிலாராணி நெல்லை கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம் புகார் கொடுக்க, அதைனையடுத்து போலீஸ் துணைக் கமிஷனரான சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி கயத்தாறில் 4வது மனைவியுடன் வசித்துவந்த வின்சென்ட் பாஸ்கரின் செட்டப் தாயான சாத்தான்குளம் சியோன் மலையைச் சேர்ந்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைச்செல்வி ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

விசாரணையில் வின்சென்ட் பாஸ்கர் பல பெண்களைத் திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்தது தெரியவந்திருக்கிறது. கரோனா தடை காலத்தைப் பயன்படுத்தி திசையன்விளைப் புரோக்கர் இன்பராஜ் மற்றும் வின்சென்ட் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு விஜிலாராணியை ஏமாற்றித் திருமணம் செய்து, அதில் வரதட்சணையாக கிடைத்த நகை, பணத்தைப் பங்கு போட்டது தெரியவந்திருக்கிறது. புரோக்கர் இன்பராஜ் மூலமாக செட்டப் தாய், செட்டப் சித்தியைக் கொண்டு கடந்த ஏழு ஆண்டுகளில் 6 திருமணங்களைச் செய்த கல்யாண களவாணி மன்னனின் விஷயங்கள் வெளியே வந்திருக்கின்றன. கிடைத்த பணத்தில் தாயாக நடித்தவருக்கு 15 ஆயிரம், செட்டப் சித்திக்கு 10 ஆயிரம், கல்யாண மன்னனும், புரோக்கரும் மீதமுள்ளவற்றைப் பங்கு போட்டிருக்கிறார்கள்.

 

the gang that commercialized the marriage ... the conspirators, the groom and the broker!

 

இதுகுறித்து அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, “மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். ஆரம்பத்தில் சாயர்புரம் பணகுடி பகுதியின் திருமணமாகி குழந்தையுடனிருந்த இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வின்சென்ட் பாஸ்கர் பணத்துடன் தலைமறைவானார். அடுத்து களக்காடு, கீழகாடுவெட்டியில் இரண்டு பெண்கள், தூத்துக்குடியில் 5வது, விஜிலாராணியை 6வதாக திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார்கள். இதற்குத் திட்டமிட்ட புரோக்கர் இன்பராஜை தேடிவருகிறோம்.” என்றார்.

 

இப்படியும் திருமணக் கொள்ளையா? கண்ணைக் கட்டுது சாமியோவ்...!!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.