Skip to main content

உலக நன்மை வேண்டி 175 நாட்களாக மௌன விரதத்தை கடைபிடிக்கும் சிவனடியார்!!

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

உலகம் அமைதி பெற வேண்டி நீதி கேட்டு தனிநபர் ஒருவராக கடும் முயற்சி மேற்கொண்டு பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரைபயணத்தை திருநெல்வேலி மாவட்டத்தின் தொடங்கி 15 மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.
 

foot pilgirimage by a sage



அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(63). தற்போது சிவலோகநாதர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு உள்ளார். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் சிவ வழிபாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். சிவனடியார்களுக்கு உதவுவது, கோவில் வழிபாட்டில் கலந்து கொள்வது, கோவிலை தூய்மைப்படுத்துவது, அன்னதானம் செய்வது இப்படி பல்வேறு பரிமாணங்களில் இவரது வாழ்க்கைப் பயணம் சென்றுகொண்டிருந்த வேலையில் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் இறந்த சம்பவம் இவரை மிகவும் பாதித்தது. 

மேலும் இயற்கை சீற்றத்தால் சுனாமி, கடும் புயல், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள், மழை குறைந்து விவசாயதில் பாதிப்பு ஏற்பட்டு நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது இவரது மனதை வெகுவாக பாதிக்க செய்து யோசிக்க வைத்தது. இவைகள் தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு ஓர் முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில், குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த இவர் கடந்த சித்ரா பௌர்ணமி அன்று முதல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அன்று முதல் இன்று வரை யாரிடமும் எதையும் பேசுவதில்லை. சைகை மூலமே விளக்குகிறார். அவை புரியாத பட்சத்தில் ஒரு பேப்பரில் பேனாவால் எழுதிக் கொடுத்து விளக்குகிறார். சிவனடியார்கள் கொடுக்கின்ற உணவே இவரை பசியார செய்கிறது. கோவிலில் இருக்கும் இடத்தில் தூங்குகிறார். ஏரி குளங்களில் குளித்து விட்டு பின்பு பூஜையை துவங்குவது இவரது வாழ்க்கை பயணமாக மாறியுள்ளது.

இவரது மௌனவிரதம் தொடங்கி 175 ஆவது நாளன்று இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் கிராமத்தில் உள்ள இந்து மகா சமுத்திர கடற்கரையிலிருந்து அனைத்து உலக ஆண்டவரிடம் நீதி கேட்டு நெடும் பயண பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரையை தொடங்கி தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்கள் வழியாக வங்காள விரிகுடா கடற்கரை வரை மௌனமாக சென்று ஆன்மீக யாத்திரையை அமைதியாக நடத்த முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அனுமதி வேண்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாளாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முயற்சிக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள சிவனடியார்கள் தொடர்பு கொண்டு பாத யாத்திரை மற்றும் ரத யாத்திரையில் ஆங்காங்கே கலந்து கொள்கின்றனர்.


பின்னர் இது பற்றி அவரிடம் கேட்டபோது "உலகில் நடக்கும் பேரழிவுகளும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டி அனைத்து உலக கடவுள்களிடம் நீதி கேட்டு மவுன விரதத்தை கடைப்பிடித்து வருகின்றேன். 175 ஆவது நாள் அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பாதயாத்திரை மற்றும் ரத யாத்திரை தொடங்க உள்ளேன். எனது விண்ணப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை நான் பேசுவதில்லை என முடிவு செய்துள்ளேன்.  அதுவரை  கைவிடப் போவதில்லை" என்று என எழுத்து மூலம் தெரிவித்தார்". 

இவரது கடும் முயற்சிக்கு ஆங்காங்கே பொதுமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.