Skip to main content

’நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி’-எஸ்.ஜானகி

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

 

பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றபோது,  அங்கே அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.   இதையடுத்து அவர் மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

j

 

 அவரை  பரிசோதனை மருத்துவர்கள்,   வழுக்கி விழுந்ததில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.  இதைத் தொடர்ந்து ஜானகிக்கி அறுவை சிகிச்சை நடைபெற்றது.   நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

 

இது குறித்து எஸ்.ஜானகி,   அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறேன். வாக்கிங் ஸ்டிக் வைத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நலம் பெறுவேன். நான் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்