Skip to main content

மனைவி பிரிந்த சோகத்தால் மகளுக்கு விஷம்; உயிர் தப்பிய மகன்; இறந்த தந்தை!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Father who gave poison to his daughter

 

கிருஷ்ணகிரி அருகே, குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்ட விரக்தியில், மகளுக்கு விஷம் கலந்த மதுபானத்தை கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தை, தானும் விஷ மதுவை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள உலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாக்கப்பா (38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 11 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 


கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மே 27ம் தேதி அன்றும் தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ராஜேஸ்வரி, கணவருடன் கோபித்துக் கொண்டு, மேடுப்பள்ளி கிராமத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். கணவருடன் குழந்தைகள் மட்டும் இருந்தனர். 


மனைவி, பெற்றோர் வீட்டுக்குச் சென்றதால் சாக்கப்பா கடும் விரக்தி அடைந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். தன்னுடைய மறைவுக்குப் பிறகு குழந்தைகளை மனைவி கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிடுவாரோ என எண்ணிய அவர், குழந்தைகளையும் கொல்ல முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 27ம் தேதி மதுபானம் வாங்கி வந்த சாக்கப்பா, அதில் விஷத்தை கலந்து முதலில் மகளுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். மகன் வெளியே சென்று விட்டதால், அவனுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அவரும் விஷம் கலந்த மதுவை குடித்துள்ளார். 


பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் சாக்கப்பாவைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் சாக்கப்பாவும், சிறுமியும் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள், இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி சாக்கப்பா மறுநாள் உயிரிழந்தார். சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. 


சம்பவத்தன்று சாக்கப்பாவின் மகன், தனது சித்தப்பாவுடன் வெளியே சென்று விட்டதால் சிறுவன் உயிர் தப்பினான். இல்லாவிட்டால் அவனுக்கும் சாக்கப்பா விஷம் கலந்த மதுவை கொடுத்து கொன்றிருப்பார் என்கிறார்கள். 


இந்த சம்பவம் குறித்து சூளகிரி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 

Next Story

அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Tragedy of the young man who set himself on fire in front of the authorities in gummidipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் கல்யாணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீடு பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தாமல் நேற்று முன்தினம் (4 ஆம், தேதி) காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சென்று வீட்டை இடிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் செல்வந்தர் ஒருவர் தனது குடும்பத்திற்கு தானமாக கொடுத்த தனிநபர் பட்டா நிலத்தில் தாங்கள் வசிப்பதாக கூறியதை ஏற்க மறுத்த அதிகாரிகள் உரிய கால அவகாசம் வழங்காமல் வீட்டை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்த தீ அணைப்பான் கருவி மூலம் அவரது உடலில் பற்றிய தீயை அனைத்து, 60% காயங்களுடன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், இந்த விவகாரத்தில் பணியின் போது கவன குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, ஏளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்விழி கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர், இந்த நிலையில் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.