Skip to main content

“எனக்கு வேற வழித் தெரியல..” தந்தையைக் கொன்ற மகளின் பகீர் வாக்குமூலம்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Father passes away police arrested his daughter

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(40). மாற்றுத்திறனாளியான இவரின் மனைவி ரேவதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். 

 

வெங்கடேசனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் அவலூர்பேட்டை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தனது இளைய மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெங்கடேசன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குத் தனது ஊர்க்காரர்களுடன் சென்றுள்ளார். அது முடிந்து வீடு திரும்புபோது ஊர்க்காரர்களுடன் சேர்ந்து வெங்கடேசனும் மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமான போதையில் வெங்கடேசன் மாலை வீட்டுக்கு வந்துள்ளார். 

 

அன்று இரவு 8 மணி அளவில் வெங்கடேசன் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது மகள் பிளஸ் 2 மாணவி கத்தி கதறி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இந்த தகவலறிந்து அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதன் பிறகு அக்கம்பக்கத்தினரிடம் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்டு இறந்து போன வெங்கடேசனின் மகள் பிளஸ் 2 படிக்கும் மாணவியின் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர், தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை நான் தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

 

கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தில், “கடந்த இரண்டு வாரங்களாக எனது தந்தை இரவு நேரங்களில் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பியதும் என்னிடம் தகாத முறையில் நடக்க முற்பட்டார். நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதிக அளவில் மது குடித்த போதையில் இருந்ததால் என்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டார். வேறு வழியில்லாமல் நான் அவரிடமிருந்து என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது நெஞ்சில் குத்தினேன். அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் அன்று மாலை 5 மணி அளவில் நடந்தது. அப்போது இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு; பிறகு இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டிற்குள் வந்த நான், தந்தையை யாரோ குத்திக் கொலை செய்துவிட்டதாக கூறி அழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்” இவ்வாறு போலீசாரிடம் பிளஸ்-2 மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். தந்தையை கொலை செய்த பள்ளி மாணவியை போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.