Skip to main content

மனைவி மீது சந்தேகம் - இரண்டு வயது குழந்தையைச் சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

 Father arrested for old boy incident in thoothukudi

 

தூத்துக்குடியின் 3ம் மைல் சங்கர் காலனியைச் சேர்ந்த டேவிட் ஒர்க்க்ஷாப் ஒன்றில் வெல்டர் வேலையிலிருப்பவர். இவர் தன் மனைவி செல்வராணியுடன் வசித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டெபி. (28) இவருக்கு கிஷோர் என்பவருடன் திருமணமாகி கிறிஸ்டினா (5) கேத்தரின் (5) என்ற மகள்கள் உள்ளனர். சந்தேகம் காரணமாக முதல் கணவர் கிஷோர் பிரிந்து சென்று விட ஸ்டெபி தன் இரண்டு பிள்ளைகளுடன் தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியின் மேற்கு காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் டேவிட்டிற்கும் ஸ்டெபிக்கும் தொடர்பாகி பின்னர் டேவிட்டை 2வது திருமணம் செய்திருக்கிறார் ஸ்டெபி. அதன் பின் டேவிட் ஸ்டெபியுடன் மேற்கு காமராஜ் நகரிலும், முதல் மனைவி செல்வராணியுடன் சங்கர் காலனியிலுமாக மாறி மாறி குடும்பம் நடத்தியிருக்கிறார்.

 

இந்தச் சூழலில் ஸ்டெபி அடிக்கடி தன் செல்போனில் யாருடனோ அதிக நேரம் பேசி வந்திருக்கிறார். இதை டேவிட் கண்டிக்க அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. தன் இரண்டாவது மனைவி ஸ்டெபி மீது சந்தேகப்பட்டிருக்கிறார். நேற்று முன் தினம் இரவு டேவிட் வீட்டிற்கு வந்த போது, அது சமயமும் நீண்ட நேரம் செல்போனில் ஸ்டெபி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட டேவிட்டிற்கும் ஸ்டெபிக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரௌத்திரமான டேவிட் ஸ்டெபியையும், சிறுமி கிறிஸ்டினாவையும் தாக்க, இதில் ஸ்டெபி மயங்கி விழுந்திருக்கிறார்.

 

 Father arrested for old boy incident in thoothukudi

 

இதன் பிறகும் ஆத்திரம், வெறி தணியாத டேவிட் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கேத்தரினாவை தொட்டிலோடு சேர்ந்து சுவற்றிலடித்திருக்கிறார். இதில் குழந்தை மூர்ச்சையாக டேவிட் தப்பிச் சென்றிருக்கிறார். நேற்று காலை மயக்கம் தெளிந்த ஸ்டெபி, தொட்டிலிலுள்ள குழந்தையைப் பார்த்த போது குழந்தை மயங்கிக் கிடப்பது தெரியவர பதறிய ஸ்டெபி உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு குழந்தையைச் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

தகவலறிந்த தாளமுத்து நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியவர்கள் வழக்குப் பதிவு செய்து சங்கர் காலனியில் பதுங்கியிருந்த 2வது கணவர் டேவிட்டைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.யான பாலாஜி சரவணன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.