Farmers demand with single rupee on forehead!

ஒன்றிய அரசைக்கண்டித்து நெற்றியில் சந்தனம் தடவி ஒற்றை நாணயத்தை வைத்துக்கொண்டு விவசாயிகள் வயலில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை நெற்பயிர்கள் பருவம் தப்பி பெய்த கனமழையால் முழுமையாக சேதமடைந்த நிலையில், ஒன்றிய குழு பார்வையிட்டு சென்ற பிறகும் ஒன்றிய அரசு இதுவரை நிவாரணம் மற்றும் காப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், நெற்பயிர் பாதிப்புகளுக்கு 6248 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிற்கு தமிழக முதல்வர் கோரிக்கை வைத்த நிலையிலும், நிவாரணம் வழங்காத காரணத்தால் விவசாயிகள் ஊடு பயிர்களாக உளுந்து மற்றும் பச்சை பயிறு தெளித்து விவசாயம் மேற்கொண்டனர்.

Advertisment

Farmers demand with single rupee on forehead!

ஆனால், பருவம் தப்பிய கனமழை காரணமாக உளுந்து பயிர்களும் நாசமானது. இதனால் விவசாயிகள் நிவாரணம் மற்றும் காப்பீடு தொகை வழங்கவேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒன்றிய அரசு எந்தவித நிவாரணமும் வழங்காததால், நாகையில் விவசாயிகள் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலையூர் கிராமத்தில் வயலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், நெற்றியில் சந்தனம் தடவி ஒற்றை ரூபாய் நாணயத்தை வைத்து ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020-2021 ஆண்டுக்கான பயிர் உளுந்து காப்பீடு வழங்க வேண்டும், இந்த ஆண்டுக்கான நெற்பயிர் மற்றும் பயிர் உளுந்து காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.