Skip to main content

“உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்” - தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

farmer announce to strugglefor implement Bio-Agriculture Policy develop organic agriculture

 

தமிழக அரசு இயற்கை வழி வேளாண்மையைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவித்து செயல்படுத்தக் கோரி வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது. 

 

இதுதொடர்பாக, தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் வெங்கட்ராமன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பசுமைப்புரட்சி என்ற பெயரால் வலியுறுத்தப்பட்ட ரசாயன வேளாண்மை மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலுக்கு கெடுதல் ஏற்படுத்தி, அதிக இடுபொருள் செலவால் உழவர்களும் கடனாளியாக இருக்கிறார்கள். ரசாயனம் போடாத வேளாண் விளைபொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது எனப் புரிந்து கொண்டு, நுகர்வோரும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

 

ஆகவே, தமிழக அரசு இயற்கை வழி வேளாண்மையைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உயிர்ம வேளாண்மை கொள்கை அறிவித்து செயல்படுத்தக் கோரி உழவர் அமைப்புகளின் கூட்டு இயக்கமான தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நாளை மறுநாள்( திங்கட்கிழமை) உழவர் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக ரசாயன வேளாண்மைக்கு வழங்கும் ஏக்கருக்கு 5 ஆயிரம் மானியத்தை மரபு வேளாண்மை உழவர்களுக்கு வழங்கிட வேண்டும். இயற்கை விளைபொருட்களுக்கு சிறப்பு விலை வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும். அரசு விடுதிகள், மருத்துவமனைகள், சிறைச்சாலை போன்றவற்றில் இயற்கை விளைபொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.