Skip to main content

கால் டாக்சியில் பயணி போல் நடித்து ஓட்டுநரை அடித்து, காரை கடத்திய பிரபல ரவுடி கைது!

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
car


 

 

கால்டாக்சி ஓட்டுநரை அடித்து உதைத்து, காரை திருடிச்சென்ற பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை சேர்ந்தவர் யுவராஜ் (35). கால்டாக்சி ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு செயலி மூலம் ஒருவர் காரை புக் செய்து பெரம்பூருக்கு வரவழைத்துள்ளார்.

அதன்படி, அந்த விலாசத்துக்கு யுவராஜ் சென்றார். அங்கிருந்து 4 பேர், ‘‘கொடுங்கையூர் சீதாராமன் நகருக்கு செல்லவேண்டும்’’ என்று காரில் ஏறினர். அங்கு சென்றதும் காரில் இருந்து இறங்கிய 4 பேரும், ஓட்டுநர் யுவராஜை சரமாரியாக தாக்கிவிட்டு, காரை கடத்தி சென்றனர்.

இதையடுத்து, புகரின்பேரில், திருவல்லிக்கேணியை சேர்ந்த பிரபல ரவுடி விக்ரம்குமார் (எ) புல்லட் விக்ரம் (26), அவரது நண்பர் அரும்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்