Skip to main content

உயிரிழந்து பலருக்கு வாழ்வளித்த இளைஞர்!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Family of  teenager donates all his organs

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள தம்பிரான் வலசு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி சுசீலா. இவர்களுடைய 29 வயது மகன் பூபதி, ஐடிஐயில் படித்துவிட்டு லேத் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி காலை, வேலை நிமித்தமாக லேத் பட்டறை உரிமையாளருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி அரச்சலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பூபதியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பாக அறச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பூபதி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பூபதியின் குடும்பத்தினர், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதை அடுத்து, பூபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி மருத்துவமனைக்கு பூபதியைக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் தனித்துவமான மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், உரிய அறுவை சிகிச்சை செய்து, பூபதியின் உடலில் இருந்து கண்கள், இதயம் , இருதய வாழ்வு, கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளைப் பாதுகாப்பாக எடுத்து, சென்னை, கோவை, கரூர் மற்றும் பெங்களுருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடைய பூபதியின் உடலுக்கு  அபிராமி  மருத்துவமனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு தரப்பிலும், அவரது குடும்பத்தினர் தரப்பிலும் உரிய மரியாதை செலுத்தப்பட்டது அடுத்து, காங்கேயத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.