Skip to main content

ரம்பத்தால் அறுத்து குடும்பமே தற்கொலை... நீடிக்கும் மர்மத்தால் பொழிச்சலூரில் பதற்றம்!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

சென்னை அருகே பொழிச்சலூரில் ஐ.டி நிறுவன ஊழியர் மனைவி, இரு குழந்தைகளை எலெக்ட்ரிக் ரம்பத்தால் அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி பாஜகவின் பொழிச்சலூர் மண்டல மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று மே 27 ஆம் தேதி பிரகாஷ்- காயத்ரி தம்பதியினருக்கு திருமணநாள் என்பதால் காயத்திரியின் தந்தை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாதத்தைத் தனது மகளுக்கு கொடுக்க வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு உள்பக்கமாக தாழிப்பட்டிருந்த நிலையில் உள்ளே ஏதோ மெஷின் இயங்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் அச்சமடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகள் காயத்ரி, மருமகன் பிரகாஷ், பேரக்குழந்தைகள் ஹரி கிருஷ்ணன், நித்திய ஸ்ரீ ஆகிய நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பிரகாஷ் கையில் எலெக்ட்ரிக் ரம்பம் ஒன்று இயங்கி கொண்டிருந்த நிலையில் கிடந்தது. அந்த சத்தம்தான் வெளியே கேட்டுள்ளது.

 

இந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் இருப்போருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அமேசான் எனும் பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் ரம்பத்தை ஆர்டர் செய்த பிரகாஷ் இந்த கொலை செயலில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொலை நிகழ்ந்த வீட்டிற்கு வந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கடன் தொல்லையால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் எங்களின் முடிவுக்கு யாரும் காரணமல்ல என்ற கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம். மனைவி குழந்தைகளை பேட்டரியால் இயங்கக்கூடிய ரம்பத்தால் அறுத்து கொலை செய்துவிட்டு வலது கையால் ரம்பத்தை இயக்கி தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் பிரகாஷ் என காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.

 

பிரகாஷ் வீட்டுக்கு அருகிலேயே நாட்டு மருந்து கடை ஒன்றை வைத்திருந்ததாகவும், கரோனா காலத்தில் நன்றாக வருமானம் வந்த கடை தற்பொழுது இழப்பில் கொண்டுபோய் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் அவர் ஆரம்பித்த நெய் விற்பனை கடையும் இழப்பில் சென்றதால் குடும்பம் கடனில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இருக்கும் மனைவியும் பல்வேறு தரப்புகளில் உதவியை நாடிய போதிலும் கடனை அடைக்க முடியாத சூழல் இருந்ததாக கூறப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரத்தை போலீசார் வீட்டில் கண்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை என்றாலும் ஆன்லைனில் ரம்பத்தை வாங்கி கொடூர முறையில் தற்கொலை செய்ய என்ன காரணம்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர தற்கொலை சம்பவம் பொழிச்சலூரில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.