Skip to main content

வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குதல் குறித்த போலி வீடியோ; சம்பவத்தில் திடீர் திருப்பம்

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Fake video on North State workers attack; Sudden turn of events

 

தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது தொடர்பான போலியான தகவல்களை பரப்பியது பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலியாக பரப்பப்பட்ட அந்த வீடியோ பீகார் மாநிலம் பாட்னாவில் எடுக்கப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வித காயமும் ஏற்படாத சிலர் காயமடைந்ததைப் போல் சித்தரிக்கப்பட்டு வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Fake video on North State workers attack; Sudden turn of events

 

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் முக்கிய நபராக இருந்த மணீஷ் காஷ்யப் என்ற யூடியூபரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து மணீஷ் காஷ்யப்பை விரட்டி பிடிக்கச் சென்றபோது தப்பித்து ஓடிய மணீஷ் பின்னர் பீகார் மாநிலம் ஜெகதீஸ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தமிழ்நாடு போலீசார் பீகார் போலீசாருடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மணீஷ்  காஷ்யப்பை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தவும் தமிழக தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மணீஷ் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.