Skip to main content

“என்னடா இது பித்தலாட்டமா இருக்கு...” - வைரலாகும் அமானுஷ்ய வீடியோ

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

fake ghoest video viral on social media

 

ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், காவி உடையில் இருக்கும் சித்தர் திடீரென பறந்து சென்ற சம்பவம்  பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு அருகே உள்ளது பிரப்பன்வலசை கிராமம். இந்த கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதே சமயம், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அந்த முகாமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.  

 

அந்த முகாமிற்கு வெளியே யாரோ ஒரு நபர் விசித்திர குரலில் கத்துவது போல் இருந்துள்ளது. இதைக் கேட்ட நபர் ஒருவர் அச்சத்துடன் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே இருந்த வாகனத்தின் மீது பறந்த நிலையில் ஒரு உருவம் இருந்துள்ளது. காவி உடையில் சித்தர் போல் தோற்றம் கொண்ட அந்த நபர் மிளிர்ந்த கண்களுடன் வானத்திலிருந்து பறந்து வந்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல், ஜன்னல் ஓரத்தில் எட்டிப்பார்த்த நபரையும் பயமுறுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், இந்த சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 27 நொடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ பார்ப்பவர்கள் பறக்கும் சித்தர் என கமெண்ட் செய்து வந்தனர்.

 

ஆனால், இந்த வீடியோவில், ஒரு பெண்ணும் இருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிய வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான பூபதி என்பவர் நம்மிடம் பேசும்போது '' இந்த வீடியோ போலியானது. யாரோ வேண்டுமென்றே இதை சோசியல் மீடியாவில் பரப்பியுள்ளனர். இத்தகைய செயல்களால் பொதுமக்கள் அதிகளவில் அச்சப்படுகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.