Skip to main content

போலி சிஐடி போலீஸால் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Fake CId police who extorted 1.50 lakh from the farmer!

 

தர்மபுரி அருகே, விவசாயியிடம் ரூ.1.50 லட்சம் ரொக்கம், அடையாள ஆவணங்களை வழிப்பறி செய்த போலி போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிக்கலூரைச் சேர்ந்தவர் விவசாயியான கந்தசாமி. இவர் வங்கியில் தனது நகைகளை அடமானம் வைத்து  1.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். கோட்டப்பட்டி அருகே உள்ள சேக்கேரி - திருவண்ணாமலை சாலை பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கந்தசாமியை வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர், தன்னை ஒரு சிஐடி போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருடைய வாகனத்தைச் சோதனையிட வேண்டும் கூறியுள்ளார்.

 

சோதனையின் போது ஒரு பாலிதீன் பையில் கந்தசாமி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட 1.50 லட்சம் ரூபாய், ஆதார் அட்டை, வங்கி  கணக்கு புத்தகம், 3 கிராமில் ஒரு மோதிரம் ஆகியவற்றை வைத்திருந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் பணம், ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, கோட்டப்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்றார். அங்கு தன்னிடம் ஒரு சிஐடி போலீஸ்காரர் விசாரணை செய்ததாகவும், அவர் தனது பணத்தையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.     

 

காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் கூறிய அடையாளத்தில் யாரும் சிஐடி பிரிவில் வேலை செய்யவில்லை என்பதும், அவரை மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரூர் மாம்பட்டியைச் சேர்ந்த தாஸ் செட்டி மகன் அலெக்ஸ் பாண்டியன் (18) என்ற வாலிபர்தான் கந்தசாமியிடம் சிஐடி போலீஸ்காரர் எனக்கூறி நூதன முறையில் ஆவணங்களையும் பணத்தையும் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது  செய்தனர். அந்த வாலிபரிடம் இருந்து ஆவணங்கள், 97,500 ரூபாய் ரொக்கம், மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அலெக்ஸ் பாண்டியன் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.