![extreme speed; Excessive intoxication; The car crashed into the canal](http://image.nakkheeran.in/cdn/farfuture/dFCU0CQtSz-H68wSr7yUIBcSr_tUOoev-hgpBn6529g/1695895169/sites/default/files/inline-images/a1671.jpg)
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் காரை இயக்கிய நிலையில் சாலையோர கால்வாய்க்குள் கார் விழுந்து மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் காஞ்சிபுரத்தில் இருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார். கார் ஓட்டிய அந்த இளைஞர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்க்குள் விழுந்தது. கார் காட்டுப்பாட்டை இழந்த உடனே காரில் இருந்த அனைவரும் கீழே குதித்து விட்டனர். கார் மட்டும் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது. உடனடியாக அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஜேசிபியை வைத்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளே கிடந்த கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிய அர்ஜுன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.