Skip to main content

''எல்லோருக்கும் எல்லாம்...''- சாலையோர கடைகளை ஊக்குவித்த அமைச்சர் சக்கரபாணி

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"Everything for everyone..."- Minister Chakrapani who promoted roadside shops

 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டின் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு பாதுகாப்பு சட்டப்படி செயல்படும் சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று 'எல்லோருக்கும் எல்லாம்' உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்திராக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்ட சாலையோர உணவகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் சக்கரபாணி கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டனர்.

 

அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''தென்னிந்திய வர்த்தகம் உணவு சார்பாக நடைபெறுகின்ற 'எல்லோருக்கும் எல்லாம்' சாலையோர பாதுகாப்பு சட்டப்படி நடத்தப்படும் உணவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்தவர்களை வரவேற்கிறேன். ஐக்கிய நாடுகளில் சாலைகளின் சார்பாக 1779 முதல் ஆண்டுதோறும் உணவுத் திருவிழா அக்டோபர் 16 ஆம் தேதி உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக 150 நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாமும் ஒருநாள் முந்தியே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

 

"Everything for everyone..."- Minister Chakrapani who promoted roadside shops

 

குறிப்பாக இந்த ஆண்டு சிறந்த உற்பத்தி, சிறந்த சத்துணவு, சிறந்த சூழல், சிறந்த வாழ்வு என்பதை நோக்கி செயல்பட வேண்டும் என ஐ.நா.உணவு மற்றும் மேலாண்மை வலியுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் நமது முதல்வர் வழிகாட்டுதல்படி இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி இருக்கிறோம். சாலையோர கடை உரிமையாளர்களை வரவழைத்து அவர்களை சிறப்பு செய்வது இதுவே முதல்தடவை என நினைக்கிறேன். தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி அனைவருக்கும் உணவுப் பொருள் வழங்குவதற்கும் சத்துணவு உணவு கிடைப்பதற்கும் அரசு பாடுபட்டு வருகிறது. அதேபோல் பசியின்றி, நோயின்றி எல்லோரும் வாழும் வகையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.