Skip to main content

''ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினருமே சேர்மன் தான்''-கீழக்கரை நகர்மன்றத் தலைவர் நெகிழ்ச்சி!

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

 '' Every city council member is chairman ''

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக பணியை துவக்கினார் சஹானாஸ் ஆபிதா. பணியை தொடங்கும் நிகழ்வில் அவர் பேசுகையில்,

 

''தமிழக முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியில் நிறையத் திட்டங்கள் நம்முடைய கீழக்கரை பகுதிக்கு வர இருக்கின்றன. மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆதரவோடு கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அஹமது அன்போடு, திமுகவினரின் ஒத்துழைப்போடு அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு கீழக்கரை பகுதியில் சுத்தம் சுகாதாரத்தில் முழு கவனம் செலுத்தப்படும். மேலும் கீழக்கரை மக்களின் அன்போடும், ஆதரவோடும் மக்களின் சேவை தொடரும். நம் பகுதியின் ஒவ்வொரு நகர்மன்ற உறுப்பினருமே சேர்மன் தான்'' என நெகிழ்ந்தார்.

 

நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சேர்மனாக கொண்ட செஹானாஸ் ஆபிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாருக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை'' - வீடியோ வெளியிட்டு ராஜினாமா செய்த காவலர்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

"Who hasn't got freedom yet" - the policeman who released the video and resigned

 

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் பல இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்திலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்தநிலையில், நாட்டில் யாருக்கும் இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால், என்னுடைய பணியை இந்த 77ஆவது சுதந்திர தினத்தில் ராஜினாமா செய்கிறேன் என காவலர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''தேசத்தில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் எனது காலை வணக்கம். எனது பெயர் கார்த்திக். முதல் நிலை காவலராக ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த தேச திருநாட்டில் சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகியும் இன்றும் சுதந்திரம் இல்லாமல் இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேசத்திற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நான் உயிராய் நேசிக்கும் எனது காவல் பணியை இந்நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15, 2023 அன்று ராஜினாமா செய்கிறேன். நன்றி வணக்கம். ஜெய் ஹிந்த்'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்; க்யூ பிரிவு விசாரணை

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

nn

 

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து க்யூ பிரிவு போலீசார் அந்த தோப்பு பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரித்து வரும் போலீசார் சம்பந்தப்பட்ட தோப்பின் உரிமையாளரை விசாரித்து வருகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.