Skip to main content

“முதல்வரின் புதிய திட்டத்தால் தற்போது தேங்கும் நீர் கூட தேங்காது...” - அமைச்சர் எ.வ. வேலு!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

Even the stagnant water will not stagnate at present due to the new plan of the Chief Minister

 

சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பதை உறுதிப்படுத்த அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு கூறியதாவது, “இரண்டு தினங்களாக தொடர்ந்து சென்னையிலேயே மழை விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல்வர் அந்தந்த துறை அமைச்சர்களை அழைத்து துறையின் சார்பாக அங்கங்கு மக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் பணிகளை செய்யுமாறு ஆணை பிறப்பித்துள்ளார்.

 

அந்த அடிப்படையில்தான் நேற்றும் (07.11.2021), இன்றும் தொடர்ந்து சென்னையைச் சுற்றிச் சுற்றி நெடுஞ்சாலைதுறை சார்ந்த பாலங்கள், நீர் போக்கிகளெல்லாம் முறையாக செயல்படுகிறதா என்கிற ஆய்வு பணிகளை தொடர்ந்து செய்துவருகிறேன். இரண்டாம் நாளாக இன்று வேளச்சேரி பகுதி, குறிப்பாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி, பல்லாவரம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள 16 பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக தண்ணீர் செல்கிறதா என குழுவுடன் சேர்ந்து பார்த்துவருகிறோம். அதேபோல் சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் தண்னீர் வெளியேற்றப்பட்டு வாகனங்கள் இயங்கிவருகின்றது.

 

சென்னையிலேயே பெரிய சுரங்கப்பாதையான தில்லை கங்கா சுரங்கப்பாதையிலும் தற்போது அனைத்து நீரும் சுத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வரும் பந்தை போல் வேகமாக ஆங்காங்கே சென்று துறை சார்ந்த பணிகளை முடுக்கிவிட்டுவருகிறார். இதில் முதல்வரே ஈடுபடும்போது அமைச்சர்கள் எங்களுக்கு உந்து சக்திதான். இந்தமுறை வெள்ளப் பாதிப்பு அதிகமாக ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்” என்றார்.

 

மேலும் பத்திரிகையாளர்கள், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரனை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைப் பற்றி கேட்டத்தற்குப் பதிலளித்த அமைச்சர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ. 70 கோடி மதிப்பில் ஒரு திட்ட மதிப்பை வழங்கியிருக்கிறார். அது நிறைவேற்றப்பட்ட உடன், தற்போது தேங்கும் மழை நீர் கூட தேங்காத நிலை உருவாகிவிடும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.