Skip to main content

தப்பிச்சா விட்ருவோமா? - கைதியை வளைத்த மதுரை சிறைத்துறை!  

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Escaped madurai prisoner arrested in tiruppur

 

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியான ஆதி என்ற அருண்குமார், கடந்த 16-ஆம் தேதி மதுரை மத்திய சிறையின் வெளி வளாகத்தில் தோட்டப்பணியில் இருந்தபோது, சிறைக்காவலர் பழனிக்குமார் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பினார். சிறைக்காவலர் பழனிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார்.

 

கைதி ஆதி தப்பியோடியது குறித்து மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகாரளித்த சிறைத்துறை நிர்வாகம், சிறைத்துறை சார்பில் 5 பேர் கொண்ட குழுக்களை அமைத்து  ‘ஆதி எங்கே?’ எனத் தேடுதல் வேட்டை நடத்தியது. தப்பித்த ஆறாவது நாளில், திருப்பூரில் ஆதி பிடிபட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் ஆதியை அடைத்துள்ளனர். 

 

கைதி ஆதி பிடிபட்டது எப்படி?


ஆதியின் மனைவி மற்றும் துணைவி என அவனுக்கு நெருக்கமான வட்டத்தைக் கண்காணித்து வந்தது சிறைத்துறை டீம். கரூரில் ரவுடி கும்பல் ஒன்று ஆதியின் நட்பு வட்டத்தில் இருந்ததால், அவர்களும் கவனிப்பில் இருந்தனர். கோயம்புத்தூர் சிறையில் ஒரே பிளாக்கில் இருந்த கொலை வழக்கு கைதியான காதர் பாய் என்பவரிடம் ஆதி நெருங்கிப் பழகியதும், அவர் விடுதலையாகி தற்போது திருப்பூரில் வசிப்பதும் தெரியவர, சிறைத்துறை டீம் அங்கும் அலர்ட்டானது. 

 

Escaped madurai prisoner arrested in tiruppur

 

‘எங்கு சுற்றினாலும் கையிலிருக்கும் பணம் செலவானபிறகு, காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி நிச்சயம் திருப்பூர் வருவான்’ என ஸ்கெட்ச் போட்டுக் காத்திருந்தனர், டீமில் இடம்பெற்ற சிறை உதவி அலுவலர் பழனி மற்றும் முதன்மைத் தலைமைக் காவலர் சரவணன் உள்ளிட்டோர். அவர்கள் நினைத்ததுபோலவே, 21-ஆம் தேதி காதர் பாயைப் பார்ப்பதற்கு ஆதி வர, சுற்றிவளைத்துக் கொத்தாக அள்ளினர்.  


ஆயுள் தண்டனைக் கைதி ஆதியைத் தப்பவிட்டு சேறு பூசிக்கொண்ட மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் மீதான கறை, அவரைப் பிடித்ததன் மூலம் கழுவப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.