Skip to main content

கவனம் பெறும் ஈரோடு மாவட்ட இளம் எஸ்.பி..! 

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Erode superintendent of police  arranged corona awareness camp at hill station


போலீசார் என்றாலே வனப் பகுதியில் வாழும் மலைவாசிகள் மத்தியில் ஒரு வித அச்சம் இருக்கும் அப்படியொரு காலமெல்லாம் இருந்தது. அப்படிபட்ட மக்களின் பயத்தை போக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமல்ல உங்களுக்கு உதவும் ஊழியர்களாகவும் நாங்கள் செயல்படுவோம் என மலை பகுதி மக்களுக்கு நற்செயலை செய்யும் காவல் அதிகாரிகளும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஈரோட்டின் இளம் எஸ்.பி.யான டாக்டர் சசிமோகன் ஐ.பி.எஸ், எடுத்த நடவடிக்கை மலை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அந்தியூர் மலை காடுகள், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் மலை பகுதி என பரந்து விரிந்துள்ளது. ஏறக்குறைய இந்த மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். சசிமோகன் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று முறை மலை கிராமங்களுக்கு சென்று மலை வாழ் மக்களுக்கு அரசு சார்பான நல உதவிகளை வழங்கியும், அவர்களுடன் நெருங்கி பழகியும் வருகிறார்.

 

Erode superintendent of police  arranged corona awareness camp at hill station


10ம் தேதி காலை 11.00 மணிக்கு பவானிசாகர் மலை பகுதியில் உள்ள நந்திபுரம் என்ற கிராமத்தில், போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் ஆலோசனைகளை மக்களிடம் கலந்து பேசியதோடு, மலை கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாமையும் நடத்தினார். இவ்விழாவில் சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா, பவானிசாகர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன், பவானிசாகர் வனசரகர் சிவக்குமார், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு, மவோயிஸ்ட் நூண்ணறிவு பிரிவு, காவல் ஆளினர்கள், அப்துல்கனி மதர்ஸா, ஆகியோரோடு இஸ்லாமிய உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர். நந்திபுரம் கிராமத்தில் வசிக்கும் 23 இருளர் குடும்பத்தினரும் அதில் கலந்து கொண்டனர். 

 

Erode superintendent of police  arranged corona awareness camp at hill station

 

வெறும் ஒரு கூட்ட நிகழ்வாக இல்லாமல் எஸ்.பி.யின் ஏற்பாட்டின்படி தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய தலா 1 சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வேட்டி, சேலை, சுடிதார், டிபன் பாக்ஸ், பாய், தலையனை, பெட்சீட் மற்றும் பிஸ்கட்டுகள் ஆகியவை 23 இருளர் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த நல உதவி பொருட்களை நு.மு.ஆ. அப்துல்கனி மதர்ஸா, இஸ்லாமிய உயர்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு மேக்ஸிமா பேட்டரி மற்றும் சு.ழு. சர்வீஸ் நிறுவனத்தினர் இணைந்து வழங்கினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.