Skip to main content

இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்திய போலீசார்; ஈரோடு எஸ்பி அதிரடி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

erode police superintendent jawahar ips severe instruction inspectors

 

ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் ரவுடிசம், கள்ளச்சாராய, மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை ஒழிக்கப் பாடுபடுவேன் என்று கூறினார். இதேபோல் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இரவு நேர ரோந்துப் பணியில் கவனம் செலுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சப்- டிவிஷன்களான ஈரோடு டவுன் பகுதி, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய சப்- டிவிஷனில் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் தலைமையில் ஒவ்வொரு சப் - டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் இரவு ரோந்துப் பணியில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் கீழ் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் இரவு நேரம் ரோந்துப் பணியைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.

 

மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அல்மான் ஜமால் செல் நம்பர் 9498111786, ஈரோடு டவுன் பகுதிக்கு மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா-94436 56999 ரோந்து காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பவானி சப்- டிவிசனுக்கு பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி-94981 02067, கோபி சப்- டிவிசனுக்கு கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி- 83000 37067, சத்தியமங்கலம் சப் - டிவிசனுக்கு பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார்- 9498149743, பெருந்துறை சப் டிவிஷனுக்கு கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்-9498191545 ஆகியோர் ரோந்து அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.