Skip to main content

ரகசிய கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

எம்.எல்.ஏ., அமைச்சர், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் என பலர் மீதும் பல குற்ற வழக்குகள் முந்தைய காலங்களில் இருந்த துண்டு. அதிகாரத்திற்கு வந்து விட்ட பிறகு வழக்குகள் நிறைவு பெற்று பலர் மக்கள் தலைவர்களாக உள்ளார்கள். ஒரு சிலர் மீது இப்போதும் வழக்குகள் இருக்கத்தான் செய்கிறது.
 

சரி இவர்களின் கதை ஒரு புறம் இருக்கட்டும்... இப்போது கண்கானிக்கப்படுபவர்கள் க்ரைம் சம்பவங்களில் முன்பு ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகள் தான்.

 

police



ஈரோடு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை, கொள்ளை  வழக்குகளில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள். அதில் தண்டனை காலம் முடிந்தோ அல்லது அவர்கள்  ஜாமினில் வெளியே வந்தவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களை தனிப்பிரிவு மற்றும் கிரைம் போலீசார் மூலம் பட்டியலிட்டு அதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார்  கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  
 

இவர்களது நடவடிக்கைகளை போலீசார் மிகவும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.    இவர்களில் யாரால் மீண்டும் பிரச்சனை வரும் அல்லது பிரச்சினை வரக்கூடும் என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் ரகசியமாக விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
 

 இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் பழைய  குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தீவி்ரமாக கண்காணித்து வருகிறோம்.  ஈரோடு மாவட்டத்தில் 920 பழைய குற்றவாளிகள் உள்ளனர்.  அவர்கள் பற்றிய பட்டியல் வைத்துள்ளோம். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 


 

 அவர்கள் பெயர் முகவரி தற்போது அவர்கள்  என்ன செய்து வருகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் ? போன்ற விவரங்களை தயார் செய்து அதனை கணினியில் பதிவு செய்து உள்ளோம். இந்த கண்காணிப்பு தொடரும் என்றார். 
 

"இதே போல் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் போலீசார் ரகசியமாக கண்கானித்து அவர்கள் பெறும் லஞ்சத்தை, ஊழலை மக்களிடம் வெளியிட்டால் அது சிறப்பான, தரமான சம்பவமாக இருக்குங்க சார்" என நையாண்டி யாக அதே சமயம் சீரீசாகவும் பேசினார் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.