Skip to main content

உயிருக்குப் போராடும் யானை; வனத்துறையினர் சிகிச்சை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
erode district sathyamangalam elephant incident

குடிநீர் தேடிவந்த யானை குழிக்குள் வீழ்ந்து உடல்நலம் குன்றிய சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி வறட்சியான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வருகிறது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானையைக் குழியில் இருந்து மீட்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. 

சார்ந்த செய்திகள்