bb

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. திமுக-காங்கிரஸ்கூட்டணிதேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.

Advertisment

 Erode by-election; Congress announces candidate

இந்நிலையில் பரபரப்பான இடைத்தேர்தல் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இரண்டு நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment