Skip to main content

“அரசு இயந்திரம் முழுவதும் நிர்வாகச் சீர்கேடு புரையோடிப் போயுள்ளது” - இ.பி.எஸ் கண்டனம்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 EPS says Corrupt administration is rampant throughout the government machinery

பீகாரைச் சேர்ந்த தம்பதியர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்காகச் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் இருந்தனர். 

இந்த நிலையில், தம்பதியரின் 11 வயது மகனுக்குக் கடந்த சில தினங்களாகத் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவனது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சிறுவனை அழைத்து சென்றபோது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியதில் தம்பதியர் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனால் அதனைக் குடித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த தி.மு.க அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம். 

மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படைத் தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதி செய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

குழப்பத்தில் எடப்பாடி; பதிலடி தந்த மா.சு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

 Confused Edappadi - Answer replied Ma.su

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட்டானவர்களுக்கு உயரிய அவசர சிகிச்சை அளித்தது திமுக அரசின் மருத்துவத்துறை. அட்மிட்டானவர்களை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார். மருத்துவர்களுக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று சொல்ல, உடனே, "4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக பதிலடி தந்தார் அமைச்சர் மா.சு. 

இந்த நிலையில்,  Fomepizole  மருந்து இல்லை என்று பேசிய எடப்பாடிக்கு மீண்டும் பதிலடி தரும் வகையில் தந்திருக்கிறார்  அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

இது குறித்து அவர்  பேசியபோது, "  இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி. Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol)  மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.    மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது  புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால்,  அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின்,  எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும் " என்று செம காட்டமாக  பதிலடி தந்துள்ளார் அமைச்சர் மா.சு. அமைச்சரின் பதிலடி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.