Skip to main content

கஞ்சா போதையில் கார் ஓட்டிய இன்ஜினியர்; துப்பாக்கி, லேப்டாப் பறிமுதல்!

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

An engineer who drove a car under the influence of ganja; Gun, laptop confiscated!

 

 

சேலம் அருகே, கஞ்சா போதையில் கார் ஓட்டி வந்த இன்ஜினியர் ஒருவர், சாலையோரம் நின்ற லாரி மீது மோதினார். அந்த காரில் இருந்து துப்பாக்கி, லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே ராம்நகரில் உள்ள உணவகம் எதிரில் ஆக. 7ம் தேதி, ஒரு லாரி விபத்தில் சிக்கி, சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த கார் ஒன்று, லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

 

கார் மோதியதில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதியை நோக்கி ஓடினர். ஆனால் அதற்குள் காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விரட்டிச்சென்று பிடித்து, காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

காவல்துறை விசாரணையில், அவருடைய பெயர் பர்கான் அலி (34) என்பதும், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவதும், பாலக்காட்டில் இருந்து ஆக. 7ம் தேதி சேலம் வழியாக பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரிய வந்தது.

 

சம்பவம் நடந்த போது அவர் கஞ்சா போதையில் இருந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில், வேகமாக காரை ஓட்டி வந்து லாரி மீது மோதியுள்ளார். அவர் வந்த காருக்குள் இருந்து ஏர் கன் துப்பாக்கி, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த விபத்தில், பர்கான் அலி லேசான காயம் அடைந்துள்ளார்.

 

விசாரணையின்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் பேசியுள்ளார். இதையடுத்து அவரை, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

 

இது தொடர்பாக பர்கான் அலியின் மனைவிக்கு செல்போன் மூலம் காவல்துறையினர் தகவல் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.