Skip to main content

தேர்தல் நாளில் காவல்துறையினருக்கு ‘அவசர’ உத்தரவு! - வி.எச்.எஃப். செட் ஒப்படைப்பில் வில்லங்கமா?

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

hjk

 

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் இத்தனை அவசரகதியிலா காவல்துறையினர் செயல்படவேண்டும்? வேறுவழியின்றி, , நாளை (6-ஆம் தேதி)  வாக்குப்பதிவு முடிந்ததும், காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டது போல், தங்களுக்கு இட்ட கட்டளையை அரக்கப்பரக்க நிறைவேற்றப் போகின்றனர். 


இதென்ன விவகாரம்? வாக்குப்பதிவு நாளில், வி.எச்.எப். (very high frequency) தொலைத்தொடர்பு உபகரணங்களான வாக்கி-டாக்கி, வாகனங்களின் பொருத்தப்பட்டுள்ள மைக் போன்றவற்றை, பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆந்திரா – ஒருங்கிணைந்த போலீஸ் வயர்லெஸ் இயக்குநரகத்திலிருந்து பெறப்பட்டு, தமிழகத்தில் பல அலகுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்நிலையில், ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையம், மண்டல் மற்றும் ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை, ஏப்ரல் 8-ஆம் தேதி நடத்துவதாக அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில டி.ஜி.பி., தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தொலைத்தொடர்பு சாதனங்களை அதே நல்ல நிலையிலேயே, காலதாமதம் செய்யாமல், உடனே சென்னை PTB சர்வீஸ் பிரிவுக்கு அனுப்பவேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு ‘ரேடியோ மெசேஜ்‘ வாயிலாக தகவல் அனுப்பினார். 


தமிழக காவல்துறை ஏடிஜிபியும், அத்தகவலை அப்படியே ஏற்று, விரைந்து செயல்பட வேண்டுமென, தென்மண்டல காவல்துறை அதிகாரிகள் வரைக்கும் ‘ரேடியோ மெசேஜ்’ அனுப்பினார். மத்திய மற்றும் தெற்கு மண்டல ஏடிஎஸ்பி (Tech) ரமேஷ், காவல்துறையினருக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பிய வாய்ஸ்-மெசேஜில் – “அசெம்பிளி எலக்ஷனுக்காக நாம வாங்கிய சர்வீஸ் செட் எல்லாத்தயும் ஆந்திரா – தெலங்கானாவுக்கு திருப்பிக் கொடுக்கணும். இந்த செட்டை எல்லாம் பக்கத்துலயே கொடுத்து வச்சிக்கங்க. ரொம்ப லாங் டிஸ்டன்ஸ்ல கொடுக்க வேணாம். அப்புறம் கழற்ற முடியாது. போலிங் 7 மணிக்கு முடிஞ்சிருச்சுன்னா.. 8 மணிக்கு கழற்ற ஆரம்பிச்சிருங்க. எஸ்.பி.கிட்ட எமர்ஜெனிஸின்னு காமிச்சிட்டு, நைட்டோட நைட்டா ஆள போட்டு மதுரைக்கு கொண்டு வந்திருங்க. நாங்க வண்டிய வச்சிக்கிட்டு ரெடியா உட்கார்ந்து இருப்போம். எனக்கு ஏழாம் தேதி காலைல 6 மணிக்கு போகணும்னு சொல்லிருக்காங்க. அது உங்க கையிலதான் இருக்கு. நானும் இங்க வண்டி வாங்கி ஆள் போட்டு அனுப்பி விடணும். இத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கங்க. அதிகபட்ச அட்டென்ஷன் கொடுங்க. இல்லைன்னா.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பார்த்து நடந்துக்கங்க.” என்று பேசியிருக்கிறார். 


 

hjk

 

இந்த  ‘அவசரம்’ குறித்து நம்மிடம் பேசிய உயர் அதிகாரி ஒருவர் “எல்லாமே சம்பிரதாயமா நடந்துக்கிட்டிருக்கு. 7 மணிக்கு போலிங் முடிஞ்சதும் 8 மணிக்கு வி.எச்.எப். செட்டை அனுப்பனும்னு சொல்லுறாங்க. மாவட்ட / நகர தலைமையகத்துக்கு பக்கத்திலேயே செட்டை பயன்படுத்தணும். நீண்ட தூர ரோந்து மற்றும் மொபைல் பார்ட்டி வாகனங்களுக்கு கொடுக்க வேணாம்னு ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டிருக்காங்க. ஒரு ஊருல இருக்கிற வாக்குச்சாவடிக்கும், இன்னொரு ஊருல இருக்கிற கவுண்டிங் சென்டருக்கும் இடைப்பட்ட தூரம் நெறய இருக்கும். காவல்துறை டிஜிபி சொல்லுறத அப்படியே கடைப்பிடித்தால், கவுண்டிங் சென்டர் வரைக்கும் வி.எச்.எப். சாதனங்களைக் கொண்டுசெல்ல முடியாது. வாக்குப்பதிவு நடந்த இடத்திலேயே செட்டை அகற்றனும்கிற மாதிரி இருக்கு இந்த உத்தரவு. நடக்கக்கூடாத ஏதாச்சும் ஒண்ணு நடந்தாக்கூட, வெளிப்படையா வி.எச்.எப். மூலம் தகவல் பறிமாறிக்கொள்ள முடியாது. கொடுத்தது கொடுத்தபடியே நல்ல நிலையில் வி.எச்.எப். செட் இருக்கணும்னு கண்டிஷன் வேற. அப்படின்னா.. செட்ட யூஸ் பண்ணாம அப்படியே திருப்பிக் கொடுத்திருங்கன்னு ஒரு அர்த்தம் இருக்கு. சும்மாவே, இவிஎம் மெஷின் குறித்து மக்களுக்கு சந்தேகம் இருக்கு. இந்த மாதிரி நடக்கும்போது, போலீஸை வச்சே ஓட்டு மெஷினை மாற்ற திட்டம் எதுவும் இருக்கோன்னு, மக்கள் பேசுறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்திட்டாங்க.” என்றார் வேதனையுடன்.

 

திட்டமிடல் இல்லாமல் இத்தனை பலவீனமாகவா இருக்கிறது தேர்தல் ஆணையம்? 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.