Skip to main content

பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கான மின்காந்த அலை ஆய்வு... பூனை கால் தடம் பதிந்த செங்கல் கண்டெடுப்பு!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் சுமார் 20 உயரத்தில் அதே அளவு அகலத்தில் 1.6 கி.மீ சுற்றளவு கொண்ட பழமையான கோட்டை அகழியுடன் உள்ளது. கோட்டையின் மேலே பாதுகாவலர்கள் நிற்கும் கொத்தலமும் பல இடங்களும் காணப்படுகிறது. கோட்டையின நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளி, கருப்பர் போன்ற காவல் தெய்வ வழிபாடுகள் இன்றளவும் உள்ளது.

 

இந்த சங்ககால கோட்டைக்குள் உள்ள நீர்வாவி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டில் 'ஆடு, மாடு பிடிக்க வந்தவர்களை எதிர்த்து போராடி மடிந்த போர் வீரனின் பெயர்' எழுதப்பட்டுள்ளது. மேலும் கோட்டைக்குள் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கோட்டைக்கு வெளியே ஆயுத தொழிற்சாலை செயல்பட்டதற்கான சென்னாக்குழிகள், இரும்பு உருக்கு கழிவுகளும் காணப்படுவதால், இதனை அகழாய்வு செய்ய புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் கணபதிசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!


இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பொற்பனைக்கோட்டையை ஆய்வு செய்ய கேட்டதால் மத்திய தொல்லியல் துறை திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்ய அனுமதி அளித்துள்ளது. 

 

அகழாய்வுக்கு முன்பே அகழாய்வு செய்ய வேண்டிய இடங்களை ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று (25/07/2021) திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் மின்காந்த அலை கதிர்வீச்சு மூலம் ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவு சில தினங்களில் கிடைத்தவுடன் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் அகழாய்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட கிராம மக்களின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. 

Electromagnetic wave study for Porpanaikottai excavation ...   Discovery of cat footprint brick!

இந்த நிலையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கரு.ராஜேந்திரன், ஆ.மணிகண்டன், கஸ்தூரிரங்கன், ராஜாங்கம் உள்ளிட்ட குழுவினர், மேலும் மேற்பரப்பாய்வு செய்த போது கோட்டையின் வடக்கு வாசல் பகுதியில் கொத்தலம் அருகே ஒரு பெரிய செங்கல்லில் ஒரு பூனையின் கால் தடம் பதிவாகி இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும் பழங்கால பெண்கள் விளையாடப் பயன்படுத்திய வட்ட வடிவ சுடுமண் சில கண்டறியப்பட்டது. "அகழாய்வு செய்யும் போது இதேபோல பல அபூர்வமான பொருட்கள் கிடைக்கும். மேலும் ஆயுதங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கோட்டைக்குள்ளேயே பழைய கட்டுமானங்களும் வெளிப்படலாம்" என்றார் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டன்.

 

விரைவில் தமிழர்களின் வரலாற்று சான்றுகளோடு பொற்பனைக்கோட்டை வெளி வரப் போகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.